Followers

Wednesday, August 21, 2013

குலதெய்வமும் ஜாதகமும்


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வத்தின் அருளை அவர்களின் ஜாதகத்தை வைத்து தெரிந்துக்கொள்ளலாமா என்று இப்பதிவில் பார்க்கலாம்.

குலதெய்வத்தி்ன் அருளை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் உங்களின் ஜாதகம் மட்டும் போதாது உங்களின் வீட்டை வந்து பார்க்கும்பொழுது மட்டுமே தெரிந்துக்கொள்ளமுடியும். நீங்கள் வீடடில் உள்ள ஒரு நபரின் ஜாதகத்தை மட்டும் காண்பிப்பீர்கள் அதனை வைத்து மட்டும் நாம் தெரிந்துக்கொள்ளமுடியாது. அந்த ஜாதகருக்கு குலதெய்வத்தின் அருள் இருக்கிறதா என்று மட்டும் அதுவும் பாதி சதவீதம் மட்டுமே சொல்லமுடியும்.

ஒருவருக்கு இது தான் குலதெய்வம் என்பதையும் நாம் ஜாதகத்தை வைத்து தெரிந்துக்கொள்ளமுடியாது. இருக்கின்ற ஒன்பது கிரகத்தை வைத்துக்கொண்டு எத்தனை லட்சம் தேவதைகளை நாம் அடையாளம் காணமுடியும். ஒரளவு சொல்லலாம். உங்களின் முன்னோர்கள் மற்றும் உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களை கொண்டு தெரிந்துக்கொள்வது நல்லது.

உங்களின் வீ்ட்டை பார்த்தால் நன்றாக தெரிந்துக்கொள்ளலாம். உங்களின் பூஜையறையில் அந்த சக்தியை அடையாளம் காணமுடியும். அந்த இருக்கிறது என்பதை மட்டுமே சொல்லுவார்களே தவிர அதன் பெயரை சொல்லமாட்டார்கள்.

பல நண்பர்கள் என்னிடம் கேட்கும்பொழுது எங்களது வீடு வாடகை வீடு எப்படி இது சாத்தியப்படும் என்றும் கேட்டார்கள். இன்றைக்கு முக்கால்வாசி பேர் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறார்கள். நானும் வாடகை வீட்டில் இருந்து தான் அனைவருக்கும் செய்துக்கொண்டிருக்கிறேன். நமது வீட்டில் ஐந்து பேர் இருந்தார்கள் என்றால் ஐந்து பேரோடு ஆறாவதாக அந்த சக்தியும் உங்களுடன் இருக்கும்.

ஜாதகத்தை வைத்து குலதெய்வத்தை சொல்லுவது எல்லாம் பாதி மட்டுமே உண்மை. மீதி சோதிடர்கள் சொல்லும் பொய்யை தவிர வேறு ஒன்றும் கிடையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: