Followers

Thursday, August 1, 2013

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே! 
                                   நான் அதிகமாக பரிகாரம் செய்ய செல்வது கிடையாது. ஒரு சில இடங்களில் உடனே செய்வதற்க்கு சம்மதம் தெரிவித்துவிடுவேன். ஒரு ஏழையாக இருந்தால் உடனே அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துவிடுவேன். 

நமது தளத்தின் வழியாக வரும் நண்பர்கள் பல பேர் என்னுடன் நட்பாக நீண்ட நாள்கள் பழகிய நண்பர்களுக்கு செய்வது பழக்கம். இது ஏன் என்றால் பரிகாரம் என்று சொன்னால் அது நடக்குமோ அல்லது நடக்காதோ என்ற நினைப்பு அவர்களுக்கு. பரிகாரம் செய்வதற்க்கு ஒரு சிலர் பயம்கொள்கிறார்கள் ஏன் என்றால் ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்களோ என்ற நினைப்பு மட்டுமே.

என்ன ஒரு சோதிடக்காரன் எவ்வளவு ஏமாற்றிவிடமுடியும். பரிகாரத்திற்க்கு லட்சக்கணக்கில் செலவு செய்யபோகிறீர்கள் ஒரு சில ஆயிரங்கள் ஆகபோகிறது. அப்படியே அந்த பணம் போனாலும் பரவாயில்லை ஏன் என்றால் ஒரு சோதிடனுக்கு கொடுப்பது என்பது குருவிற்க்கு கொடுப்பது போல் மட்டுமே. உங்களுக்கு அந்த பணம் பல மடங்காக திரும்பிவரபோகிறது.

ஒருத்தருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றாலும் அவர்களுக்கு அந்த பாக்கியம் இருக்கவேண்டும். நான் பல பணக்காரர்களை சோதனை செய்து பார்ப்பது வழக்கம். சார் இந்த பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவேன் உடனே அவர்கள் செய்கிறேன் ஆனால் இப்பொழுது எனது தொழிலில் பிஸியாக உள்ளதால் எனக்கு எந்த நாள் பிரியாக இருக்கிறேனோ அந்த நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லுவார்கள். இவர்களின் எண்ணம் என்ன என்றால் நாம் என்று பிரியாக இருக்கிறோமோ அன்று கடவுள் சும்மா இருப்பார் அன்றைய நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லுவார்கள்.

உங்களுக்கு பரிகாரம் செய்கிறேன் என்று ஒரு நல்ல விசயம் தெரிந்தவன் சொன்னால் உடனே அதற்கான ஏற்பாட்டை செய்துவிடவேண்டும். அவன் வழியாக நமக்கு ஏதோ கடவுள் உதவி செய்ய நினைக்கிறார் என்று எடுத்துக்கொண்டுவிடுங்கள். செலவு என்பது உங்களின் வருமானத்திற்க்கு தகுந்தார்போல் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். 

பரிகாரம் எல்லாம் சுத்த பொய் இது எல்லாம் ஏமாற்றுவேலை என்று நினைத்தால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். பரிகாரம் என்று ஒன்று இருப்பதால் மட்டுமே கோவில்களுக்கு மனிதன் செல்லுகிறான். பரிகாரம் எல்லாம் பொய் என்று நினைத்தால் கோவிலுக்கு சென்று வணங்ககூட மாட்டார்கள். நடப்பது நடக்கட்டுமே கோவிலுக்கு சென்று வணங்குவதால் என்ன நடந்துவிடபோகிறது என்று நினைக்க தோன்றும்.

பரிகாரம் செய்வதற்க்கும் குரு பலம் வேண்டும் அப்பொழுது மட்டுமே எளிதில் பரிகாரத்தின் பலனை நாம் பெறமுடியும். எல்லாவற்றிக்கும் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறு முயற்சி செய்து பார்க்கவேண்டும் அந்த பரிகாரத்தால் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அவர் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் செய்து கொடுக்கும் குருவாக இருப்பார். அவரை வைத்து அனைத்தையும் சாதித்துக்கொள்ளவேண்டியது உங்களின் வெற்றியின் ரகசியம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: