Followers

Friday, August 16, 2013

வரலட்சுமி விரதம் சிறப்பு பதிவு


வணக்கம் நண்பர்களே!
                     இன்று வரலட்சுமி விரதம். அதனால் ஒரு சிறப்பு பதிவு ஒன்றை போடவேண்டும் என்று நினைத்தேன். நினைத்தபோது உதயமான ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

                    நமது பிளாக்கின் வழியாக வியாபாரத்திற்க்கு என்று உதவும் ஒரு செயலை செய்துக்கொண்டு வருகிறேன். பல நண்பர்கள் இதில் இணைந்து உள்ளார்கள். நாளுக்கு நாள் என்னிடம் அதிகம் பேர் இணைவதற்க்கு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வரவேற்கதக்க ஒன்று.

சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் ஒரு நபரின் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபரிடம் நான் எதார்த்தமாக என்னை பற்றி சொன்னேன். என்னிடம் எதுவும் இல்லை. ஒரு சந்நியாசி வாழ்க்கையும் எனது வாழ்க்கையும் ஒன்று தான் என்று சொல்லிருந்தேன். பழகுபவரிடம் எதற்குக்காக மறைக்க வேண்டும். உண்மையை எதார்த்தமாக சொல்லிருந்தேன். அவரின் நோக்கம் என்னிடம் அதிகமாக பணம் இருக்கின்றது என்று நினைத்து பழகியிருப்பார் என்று நினைக்கிறேன். 

அவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டெஸ்டிங்கில் வேலை செய்கிறார். அயல்நாட்டிலும் சென்று வேலை செய்து இருக்கிறார். அவரிடம் பணம் நல்ல இருக்கிறது. அதற்க்காக பழகுபவரிடமும் பணம் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அவர் பணம் என்னிடம் இல்லை என்பதற்க்காக எனது உறவை முறித்துக்கொண்டார். 

அவர் என்னிடம் உறவை முறிக்கும்பொழுது என்னிடம் சொல்லிய வார்த்தை எனது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சரி நம்மிடம் எதுவும் இல்லை என்று தானே இவர்கள் இப்படி எல்லாம் சொல்லுகிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். உதயமானது தான் வியாபாரத்திற்க்கு என்று உதவி செய்வது என்று முடிவு எடுத்தேன்.

ஏற்கனவே எனக்கு தெரிந்தவர்களிடம் இதனை சொல்லி அவர்களுக்கு உதவினேன். அவர்களின் வியாபாரம் நல்லமுன்னேற்றத்தை நோக்கி சென்றது. உடனே நமது பதிவிலும் இதனைப்பற்றி சொன்னால் இந்த பதிவிற்க்கு வரும் நண்பர்களும் பயன் அடைவார்கள் என்று பதிவில் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டார்கள். அவர்களுக்கு உதவினேன் அனைவரும் நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு குருவிடம் சாமி எனக்கு பணம் வேண்டும் அதற்கு எனக்கு ஒரு ஆன்மீகவழியை சொல்லி தாருங்கள் என்று கேட்டேன். கேட்ட உடனே எனக்கு ஒரு மந்திர உபதேசத்தை தந்தார். அதனை நான் உடனே உரு ஏற்றாமல் ஒன்றரை மாதங்களுக்கு பூஜை செய்து உரு ஏற்றினேன். சரியாக ஒன்றரை மாதங்களுக்குள் எனக்கு பல வாய்ப்புகளை பெற்று தந்தது. பணம் வரும் வழிகளை அனைத்தையும் தந்துக்கொண்டு இருக்கிறது.

குரு கொடுத்த மந்திர உபதேசத்தை வைத்து நமது ஜாதககதம்பத்தில் வியாபாரத்திற்க்கு என்று வருபவர்களுக்கு பூஜை செய்து அவர்களை மிகப்பெரிய அளவில் தூக்கிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு முதலில் நமது அம்மன் அனைத்தையும் செய்துக்கொண்டு இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு இந்த மந்திரம் வைத்து பூஜை செய்துக்கொடுக்க நினைத்து உள்ளேன். எப்பொழுது செய்யலாம் என்பது அது அவர்களின் கையில் தான் இருக்கிறது.

குரு கொடுத்தது லட்சுமியின் ஒரு அவதாரம் தான் அதனைப்பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்பதால் சொல்லவில்லை. சரி அதனைப்பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது அடுத்த தகவலுக்கு வருகிறேன். என்னை பேசிய நபர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டெஸ்டிங்கில் இருக்கின்ற ஆள். நாமும் இந்த தொழிலில் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு தான் ஏற்கனவே பல சாப்ட்வேர் கம்பெனி நல்ல பழக்கம் இருக்கிறது. நான் பல நாடுகளுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்துக்கொண்டு இருந்தேன் நானாக தான் அதனை விட்டு வந்தேனே தவிர அவர்கள் என்னை ஒன்றும் சொல்லவில்லை. சரி பார்க்கலாம் என்று இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னை மலேசியாவில் இருந்து எனது நண்பர் அழைத்து பேசினார். ஏன் சும்மா அங்கு உட்கார்ந்து இருக்கிறாய் நீ மலேசியா வந்து விடு என்றார்.

என்னை பொருத்தவரை எனக்கு இப்பொழுது மிகப்பெரிய ஆத்ம திருப்தி என்ன என்றால் இந்த ஜாதககதம்பத்தில் உங்களுக்காக பதிவு எழுதுவது தான். என்னால் பதிவு எழுதாமல் இருக்கமுடியாது என்பதால் நான் வரவில்லை என்றே சொல்லிவிட்டேன். அவர்கள் விடாமல் நேற்று என்னை தேடி மலேசியாவில் இருந்து வந்துவிட்டார்கள். சரி உங்களுக்கு தேவையான அனைத்து உதவியும் இங்கிருந்து செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

எனக்கு பழக்கமான பல கம்பெனிகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்றது. நான் எந்த நாட்டிற்க்கும் என்னால் எளிதில் செல்லமுடியும். அனைத்தும் சாப்ட்வேர் கம்பெனி. அவர்கள் என்னை வேலைக்கு கூப்பிடமாட்டார்கள் அவர்கள் செய்யும் தொழிலில் கூட்டாளியாக என்னை கூப்பிடுவார்கள். நமக்கு ஆன்மீகம் போதும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் விதி விடவில்லை உன்னால் எதுவும் செய்யமுடியும் என்று சொல்ல ஒரு நபரை அனுப்பி இருக்கின்ற பொழுது நம்மால் என்ன செய்யமுடியும்.


இனி அனைத்து நாடுகளிலும் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் நான் பங்குதாராக சேரலாம் என்று எண்ணுகிறேன் அல்லது அனைத்து நாடுகளிலும் சொந்தமாக கம்பெனியை நிறுவலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Don worry sir. God is there. You are doing good job so far.