Followers

Sunday, August 11, 2013

அம்மனின் மாத பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    12/08/2013 திங்கள்கிழமை நமது ஜாதக கதம்பத்தால் அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது. நாளை காலை பூஜையை செய்யவுள்ளேன். இது ஆடி மாதம் என்பதால் பல நாள்களுக்கு முன்பே இந்த பூஜையைப்பற்றி அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். பல நண்பர்கள் அதற்கு வரவேற்புக்கொடுத்து அவர்களால் முடிந்த உதவியை செய்தார்கள்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எனது நண்பர் ஜெகதாஸ் முதலாவதாக பணத்தை அனுப்பிருந்தார். அவரின் கம்பெனிக்கு நமது அம்மன் உதவுவதால் பூஜையை நடத்தவேண்டும் என்று அனுப்பிருந்தார். திண்டுக்கல் சுப்பிரமணியன் ஐயா அவர்கள் மற்றும் கோயம்புத்தூர் சீனிவாசன் அவர்கள் இந்த பூஜைக்கு உதவியவர்கள்.

வழக்கமாக மாதம்தோறும் பூஜைக்கு என்று பணம் அனுப்புவர் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். இவர்களின் வேண்டுதலுக்காக பூஜை செய்யப்படுகிறது.

இப்பொழுது அம்மனுக்கு பூஜை என்று பதிவில் சொன்னவுடன் பல பேர் பணத்தை அனுப்பிவிடுகிறார்கள். அனைத்தையும் ஒரே பூஜையில் செய்யாமல் ஒவ்வொரு பூஜைக்கு என்று ஒதுக்கி வைத்து செலவு செய்கிறேன்.

நாளை அம்மனுக்கு பூஜை செய்யும்பொழுது அம்மனிடன் உங்களின் வேண்டுதலை வையுங்கள். அடுத்த பூஜைக்குள் அதனை நிறைவேற்றிக்கொடுத்துவிடும். நாளை அம்மனை மனதால் நினைத்தால் போதும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...


வலைச்சரத்தில் தங்களின் அருமையான தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது ..

வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_13.html