Followers

Monday, August 5, 2013

வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                    என்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். என்னை சந்திக்க நீங்கள் முதலில் எனக்கு போன் செய்துவிட்டு வாருங்கள். எனக்கு வேலை பளு அதிகமாக கிடையாது. நாம் அடையாரில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

தினமும் வேலை செய்து அந்த வருமானத்தில் தான் சாப்பிடவேண்டும் என்ற விதி எனக்கு இருப்பதால் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை சந்திக்க திடீர் என்று வரும்பொழுது என்னுடன் இருப்பவர்கள் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள் அதனால் நீங்கள் என்னை சந்திக்க வருவதற்க்கு முன்பே அனுமதி பெற்று வந்துவிடுங்கள்.

சில நேரங்களில் நான் வெளியில் சென்றுவிடுவதால் நீங்கள் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்ற காரணத்தாலும் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன்.

சோதிடம், ஆன்மீகம் அனைத்தும் தனிநபர் மட்டும் தெரி்ந்துக்கொள்ளவேண்டிய ஒன்று. நீங்கள் வரும்பொழுது அவர்கள் இருந்தால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். வெளிப்படையாக பேசமுடியாது. நீங்கள் முன்பே எனக்கு போன் செய்துவிட்டு வரும்பொழுது அவர்களை வெளியில் அனுப்பிவிட்டு இந்த நேரத்திற்க்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளமுடியும்.

சோதிடம் பற்றி தெரிந்துக்கொள்ள வருபவர்கள் காலை நேரத்தில் வந்து என்னை சந்தியுங்கள். காலை நேரம் சோதிடத்திற்க்கு நல்ல உகந்த நேரம். காலையில் மனது இனிமையாக இருக்கும். அந்த நேரத்தில் சோதிடம் பார்க்கும்பொழுது சொல்லும் பலன்கள் கண்டிப்பாக நடைபெறும்.

நீங்கள் அலுவலகம் செல்லுவதால் காலையில் வருவது கஷ்டமாக இருக்கும் விடுமுறை தினங்களில் நீங்கள் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: