Followers

Monday, February 3, 2014

ஆன்மீக அனுபவங்கள் 153


வணக்கம் நண்பர்களே!
                    மந்திரம் செய்து ஒருவரை கொன்றுவிடுவேன் என்று சொல்லுவது நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதனைப்பற்றி பார்க்கலாம்.

மந்திரம் செய்து ஒருவரை கொலை செய்வதாக இருந்தால் இந்தியாவில் பாதிபேர்க்கு மேல் இப்பொழுது உயிரோடு இருக்கமாட்டார்கள். இபபொழுது எல்லாம் தெருவுக்கு ஒரு மந்திரவாதி  பேய் ஒட்டுகிறேன். சூனியம் செய்கிறேன் என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் செய்து எத்தனையோ பேர் இறந்துஇருப்பார்களே ஏன் இறக்கவில்லை?

மந்திரம் என்று சொன்னாலே அது கேரளாவில் அதிகம் அப்படிப்பட்ட ஊரில் போய் பெரியார் பகுத்தறிவு வேலை நிறைய செய்துவிட்டு வந்தார். அவரை அங்குள்ளவர்கள் மந்திரத்தால் கொன்று இருக்கலாம் ஏன் அவ்வாறு செய்யமுடியவில்லை என்று ஒரு நாள் யோசித்தால் உங்களுக்கு உண்மை புரிந்துவிடும்.

இன்றைய காலத்தில் எத்தனையோ அரசியல்வாதிகள் ஊழல் செய்து நாட்டு மக்களை கெடுக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளை எல்லாம் மந்திரவாதி கொன்று இருக்கலாமே? ஏன் செய்யமுடியவில்லை?

மந்திரங்கள் எல்லாம் இருக்கின்றன ஆனால் செய்யதெரிந்தவர்கள் இதனை செய்வதில்லை மாறாக போலிகள் இதனை வைத்து ஏமாற்றி பிழைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அதிலும் தமிழ்நாட்டில் அடிக்கும் கூத்துக்கு ஒரு எல்லையே இல்லாத அளவுக்கு இருக்கிறது. மனிதர்களை திருத்தவேண்டிய சாமியார்களே உனக்கு மாந்தீரிகம் செய்துவிட்டார்கள் என்று சொல்லி நான் உனக்கு செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி பணத்தை பறிக்கும் நிலை அதிகம். 

மந்திரத்தால் செத்தவர் ஒரு சதவீதம் என்றால் 99 சதவீதம் பயத்தால் செத்தவர்கள் தான் அதிகம். இதனை புரிந்துக்கொண்டு உங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களை படைக்கிறார் என்றால் அவ்வளவு எளிதில் உங்களை பிறர் கொன்றுவிடும்படி செய்யமாட்டார். கடவுளை நம்புங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: