Followers

Monday, February 3, 2014

குருவும் ஒரு சில உண்மைகளும்


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம் இதில் ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அதற்கு நேரம் இப்பொழுது கிடைத்தது. இந்த பதிவை படித்துவிட்டு இவர் பிராமணர் அல்லது பிராமணருக்கு ஆதரவாக இருக்கின்றார் என்று நினைக்கவேண்டாம். தசாவைப்பற்றி சொல்லுவதற்க்காகவும் ஒரு சில விசயங்களை தெளிவுக்காகவும் சொல்லுகிறேன்.

திராவிடர்கள் மனிதனை நினை கடவுளை மற என்று சொல்லுகிறார்கள். மனிதனை நினை என்று சொன்னவர்கள் பிராமணர்களை மட்டும் தள்ளிவைப்பது எதனால் என்று எனக்கு புரியவில்லை. அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி செய்கின்றனர் என்ற மனது நினைக்கும்.அரசாங்க வேலையில் கூட அவர்களை ஒதுக்கி தான் வைக்கின்றனர்.

கல்வி கூடங்களில் வேண்டுமானால் இடஒதுக்கீடு வைத்து பின்தங்கியவர்களுக்கு சலுகை வழங்கலாம் அதேயே வேலையிலும் வைத்தால் எப்படி நாடு முன்னேற்றம் அடையும். பிராமணர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கின்றனர். காரணம் குரு கிரகம் அவர்களை காட்டுவதால் அப்படி இருக்கலாம். இவர்கள் படித்தவுடன் வெளிநாடுகளுக்கு சென்று வேலையில் சேர்ந்துவிடுகிறார்கள் அங்குள்ள தொழில்கள் தான் முன்னேற்றம் அடைகிறது. 

குரு கிரகம் அறிவை காட்டும் கிரகம். அறிவாளியை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு முட்டாள்களை இந்தியாவில் உள்ள கம்பெனியில் மற்றும் அரசாங்கத்தில் வேலைக்கு எடுத்தால் எப்படி நாடு முன்னேற்றம் அடையும்.

பிராமணர்கள் படித்தவுடன் இவர்கள் வேலை கொடுக்கமாட்டார்கள் என்று வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களை விட இவர்கள் புத்திசாலியாக இருக்கின்றனர். அந்த நாடு முன்னேற்றம் அடைகிறது.

படிப்பில் சலுகையை வைத்துவிட்டு வேலையில் சமமாக தேர்வு வைத்து எடுத்தால் நாடு ஒருவருடத்தில் முன்னேற்றம் அடைந்துவிடும். 

நான் சோதிடன் எனக்கு அனைத்து சாதியில் உள்ளவர்களும் நண்பர்கள் தான் நான் சாதியை எல்லாம் பார்த்துகொண்டுருப்பதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை சோதிட கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

dreamwave said...

இல்லை ! சோதித்து பார்க்கவும்

அது ஒன்றும் குல சொத்து அல்ல .. எங்களுக்கும் பங்கு உண்டு.
அப்ப sc/st iku செவ்வோய் பலமா.