Followers

Friday, February 14, 2014

காதல்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று காதலர் தினம் இதற்கு பதிவு போடவில்லை என்றால் பதிவு எழுதுவதற்க்கே இவர் சரியில்லை என்று பல நண்பர்கள் சொல்லிவிடுவார்கள். பொதுவாக சோதிடர்களிடம் அதிகமாக செல்லுபவர்கள் காதலர்களாக இருப்பார்கள் அல்லது சோதிடர்களை தொடர்புக்கொண்டு போனிலாவது தன் காதலன் அல்லது காதலியை பற்றி சொல்லாமல் இருப்பதில்லை. அனைத்திற்க்கும் காரணம் என்ன என்றால் காதல் மேல் உள்ள நம்பிக்கை அப்படிப்பட்டதாக இருக்கின்றது.

என்னிடம் காதலிக்கும்பொழுது ஒருவர் வருவதை விட காதலில் தோற்ற பிறகு வருபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். அதற்கு காரணம் மந்திர அனுபவம் மற்றும் அம்மன் எல்லாம் வைத்திருக்கிறார் ஏதாவது செய்து நம்மை சேர்த்துவிட மாட்டாரா என்ற எண்ணத்தில் அப்படி வருவார்கள். பொதுவாக இந்த மாதிரி வேலை எல்லாம் எங்களை போல் உள்ளவர்களிடம் மாட்டினால் எங்களுக்கு எல்லாம் தீபாவளி போல் தான் இருக்கும். நான் இவர்கள் பாவம் என்று செய்வதில்லை என்று சொல்லி அனுப்பிவிடுவது வழக்கம்.

நீங்கள் காதல் செய்வது தவறு இல்லை சோதிடம் மற்றும் ஆன்மீகத்தை எல்லாம் நம்புவதைவிட நீங்கள் உங்களின் காதலன் அல்லது காதலி மேல் நம்பிக்கை வையுங்கள் அது போதும். உங்கள் காதல் மேல் நம்பிக்கை வைக்காமல் எங்களை நம்பினால் கதை கந்தலாகிவிடும். 

திருமணம் முடிந்து பல நண்பர்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் இந்த காதலர் தினத்தில் சொல்லுவது எல்லாம் நீங்கள் வாழும் வாழ்க்கை குறுகிய நாள் தான் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். உங்களை நம்பி வந்தவர்களோடு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழுங்கள் அது போதும். எப்படிடா சண்டை போடலாம் என்று இருக்காமல் சந்தோஷமாக வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழ்ந்தால் நீங்கள் இறைவனிடம் நீங்கள் கேட்டது கிடைக்கும். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மோட்சம் என்பது அவர்களின் துணையை சந்தோஷமாக வைத்திருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று எனது குரு சொல்லுவார். எங்களின் வேதவாக்கும் சந்தோஷமாக வாழுங்கள் என்பது மட்டுமே. அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: