Followers

Thursday, February 13, 2014

பணம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலர் என்ன சார் பணம் பணம் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள். அவர்களுக்கு சொல்லுவது எல்லாம் ஒரு அம்மனை வைத்து வேலை வாங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு செய்யவேண்டியதை நான் செய்துக்கொண்டே இருந்தால் மட்டுமே நாம் சொல்லும் வேலை எல்லாம் நடத்திக்கொடுக்கும். எப்பொழுதாவது மட்டுமே அதற்கு பூஜை மட்டும் செய்தால் வேலையும் நடைபெறாது ஒன்றும் நடைபெறாது.

ஒவ்வொரு ஜாதகத்தையும் வைத்து வேலை செய்துக்கொடுப்பது என்பது கடினமாக இருக்கிறது. ஒருவரிடம் வாங்கும் பணம் அவர்களுக்கு மட்டுமே பூஜை செய்வதற்க்கே எனக்கு போதவில்லை. அதனால் தான் பணத்தை திரட்டவேண்டியுள்ளது.

இதில் வந்து பார்த்தால் தெரியும் என்னடா இப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டியுள்ளதே என்று தோன்றும். கலியுகத்தில் சாத்தியப்படாத வேலைகளை எல்லாம் செய்யும்பொழுது போராட்டம் அதிகமாக இருக்கின்றது.

ஒருத்தரை வைத்து ஒரு படி தூக்கினால் மட்டும் போதாது படிப்படியாக தூக்கி நிலைநிறுத்தவேண்டியுள்ளது. இன்றைக்கு விற்க்கும் விலைவாசிக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் பணம் ஒரு பூஜைக்கு கூட வராது. அதனால் தான் நிறைய பணம் எதிர்பார்க்கிறேன்.

எனது நண்பர்கள் எல்லாம் இதனை எல்லாம் விட்டுவிட்டே போய்விட்டார்கள். ஏன் என்றால் நம்ம சொல்லுகிற பணத்தை மக்களால் தரமுடியாது. ஏதாவது பெரிய வேலை வந்தால் மட்டுமே செய்வது மீதி நாளில் வேறு வேலை பார்க்கிறது என்று இருக்கிறார்கள்.நான் மட்டும் செய்துககொண்டிருக்கிறேன். இந்த ஒரு காரணத்தால் மட்டுமே பணம் பணம் என்று கேட்டுக்கொண்டு உள்ளேன். இப்பொழுது நிறைய வேலைகளை நான் நிறுத்திவிட்டேன். சின்ன சின்ன வேலைகளை மட்டும் செய்துவிட்டு இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

muruganandam said...

can you sent me your contact details email or phone no.i did mail to your mail in your profile but dint see any reply.willing to talk to you

muruga