Followers

Saturday, February 8, 2014

காதலும் ஆன்மீகமும்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் போன் செய்து காயத்ரி மந்திரத்தை பற்றி கேட்டார். சார் நாங்கள் காயத்ரி மந்திரத்தை எடுத்து செய்தால் உங்களை போல் வரமுடியுமா என்று கேட்டார். நான் அவரிடம் வரமுடியாது என்று சொன்னேன். அதற்கு காரணம் அவர் மந்திரத்தை பயிலுவது அவரின் பிரிந்து போன காதலியை எப்படியும் மந்திரம் போட்டு திருப்பி வரசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. 

ஒரு தெய்வசக்தியை மனிதன் எப்படி எல்லாம் பயன்படுத்த நினைக்கிறான் என்று பார்க்கும்பொழுது தெய்வம் மனிதனை பார்த்து ஒடிபோய்விடுகிறது. உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் தெய்வசக்தியை அடையமுடியும் ஆனால் யாரும் அதற்கு தயார் இல்லை.

அதிகபட்சமாக இளைஞர்கள் தான் நமது ஜாதககதம்பத்திற்க்கு வருகிறார்கள். அவர்கள் பாதிபேர் காதல் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தவறு இல்லை ஆனால் தன்னுடைய காதலி எந்த நேரத்திலும் ஏமாற்றுவாள் என்ற எண்ணம் ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி உங்களின் காதல் வெற்றி பெறும்.

ஆன்மீகத்தை பற்றி எழுதும்பொழுது ஏன் காதலைப்பற்றி எழுதுகிறீர்கள் நினைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் என்னிடம் காதல் என்றால் அவ்வளவு பாவமா சார் என்று கேட்டார்.

உங்களின் காதலுக்கு காரணம் எல்லாம் கிரகங்களின் தாக்கம் மட்டுமே. ஜாதகத்தில் கிரகங்கள் கெடும்பொழுது மட்டுமே காதலில் விழுவார்கள். ஒரு சிலருக்கு அந்த கெட்ட கிரகங்கள் திருமணத்தை முடித்துகொடுத்துவிடும். முக்கால்வாசி பேருக்கு திருமணத்தை நடத்தாமல் கடவுளின் பக்கம் திருப்பிவிட்டுவிடும்.

காதல் மட்டும் இல்லை இன்றைக்கு சாமியார் பிழைப்பே இருக்காது. காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் பேர் சாமியார்களிடம் சென்று ஆன்மீக தேடுதலை ஆரம்பித்துவிடுவார்கள். கிரகங்களின் வேலையே உங்களை போட்டு அடி அடி என்று அடித்து கடவுளின் பக்கம் திருப்பிவிடுவது தான் வேலை. திருமணம் வாழ்வும் அப்படி தான் அங்கு சென்று வேறு பிரச்சினையை கொடுத்து ஆன்மீகத்திற்க்கு உங்களை இழுக்கும்.

உங்களின் காதல் வெற்றி அடைவதற்க்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. உங்களைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள். முதலில் உங்களை காதல் செய்ய ஆரம்பித்தால் மட்டுமே அடுத்தவர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளமுடியும். உங்களின் குணம் எப்படிப்பட்டது அந்த குணத்தை ஒத்தவர் வந்தால் நீங்கள் காதல் செய்யுங்கள் அப்படி இல்லை உங்களின் குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 

உலகத்தில் நடக்கும் அனைத்திற்க்கும் கிரகங்களின் தாக்கம் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். உங்களின் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் கிரகங்களின் செயல் எப்படி சென்றுக்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். வரும்காலத்தில் இப்படி எல்லாம் நடைபெறும் என்று கணிக்கமுடியும். அதற்கு தகுந்தவாறு உங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Kisshor kumar said...

உடல் கட்டு மந்திரம் என்று நான் ஒரு வலைத்தளத்தில் படித்தேன். அதில் சூர்யனுக்குரிய மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரயோகித்த பொழுது சூரியனின் காரகத்துவம் உடைய விஷயங்கள் எனக்கு எவ்வித தொந்தரவும் செய்ய வில்லை.இதை நவ கிரகங்களுக்கும் உச்சரித்து சித்தி செய்தால் நாம் மாபெரும் வெற்றி அடையலாம்.துன்பமில்லாத வாழ்க்கையும் வாழலாம்.

அந்த link ஐ நான் கீழே கொடுத்துள்ளேன்.

http://www.siththarkal.com/2010/12/blog-post_02.html

இதை பற்றிய மேலும் அறிவை தாங்கள் உபதேசிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.