Followers

Sunday, February 2, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 20


ணக்கம் ண்பர்களே!
                    இன்றைய காலத்தில் சுகமாக வாழவேண்டும் என்பது அனைவர்களின் விருப்பம்.சுகமாக வாழவேண்டும் என்று நினைத்தாலும் அந்த வாழ்க்கையை வாழ ஜாதகம் இடம் தரவேண்டும். ஜாதகத்தில் நான்காவது வீடு நன்றாக இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் சுகமான வாழ்க்கையை வாழ்ந்துவிடுவார். சுகஸ்தானம் அடிப்பட்டுவிட்டால் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாழ்க்கை தெருதெருவாக சுற்றவேண்டிருக்கும்.

தாயைப்பற்றி கடந்த பதிவில் எழுதியதற்க்கும் காரணம் வந்துவிட்டது. பெற்ற தாயை குறிக்கும் ஒரு வீடாக சோதிடத்தில் வைத்திருப்பார்கள் என்றால் அந்த வீட்டிற்க்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுத்திருப்பார்கள். அப்படிப்பட்ட வீடு உங்களுக்கு நன்றாக இருந்தால் அனைத்தும் கிடைத்துவிடும் என்பார்கள்.

உடல்நிலையிலும் ஒருவர்க்கு நன்றாக இருந்தால் தானே அனைத்தையும் அனுபவிக்கமுடியும். உடல்நிலை சரியில்லை என்றால் எப்படி அனுபவிக்கமுடியும். நமது உடல்நிலை சுகமாக இருக்கின்றதா என்று காட்டக்கூடிய இடமும் இந்த நான்காவது வீடு.

நாம் வாழுகின்ற வீடு நமக்கு முக்கியமாக கருதப்படுகிறது. மனிதனின் அடிப்படை ஆசையில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதும் அந்த ஆசை நிறைவேறுமா என்று காட்டக்கூடிய இடமும் இந்த வீடு தான்.வீடுகட்டினால் அதில் ஒரு கார் நிறுத்தவேண்டும் என்று ஆசைப்படுவதும் உண்டு. அதனை காட்டுவதும் இந்த இடம்.

பலவித விசயங்களை கொண்டுள்ள சுகஸ்தானம் அனைவருக்கும் நன்றாக இருக்கவேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை ஆனால் ஒரு சிலருக்கு என்ன செய்வது விதி விளையாடுகிறது. 

தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: