Followers

Wednesday, February 5, 2014

ஆசி


ணக்கம் ண்பர்களே!
                    நிறைய நண்பர்கள் என்னிடம் ஆசீர்வாதம் தாருங்கள் என்று கேட்பார்கள். நான் மனதிற்க்குள் நினைத்துக்கொள்வேன் என்னடா மக்கள் இப்படி இருக்கின்றார்களே.

என்னை போலவே உங்களை நினைக்கிறேன். என்னிடம் என்ன இருக்கின்றதோ அதே அளவு சக்தி உங்களிடமும் இருக்கின்றது. அதனை நீங்கள் உணரவில்லை நான் உணர்ந்திருக்கிறேன். மனிதர்களுக்குள் மனிதர்கள் ஏன் ஆசீர்வாதம் எல்லாம் கொடுக்கவேண்டும். உங்களை போல் என்னை நினையுங்கள் அது போதும்.

ஜாதககதம்பத்தில் எழுதுவது எல்லாம் என்னை போல் நீங்கள் உயரவேண்டும் அதாவது ஆன்மீகத்தில் உயரவேண்டும் என்பதற்க்காக தான் ஒளிவு மறைவின்றி எழுதுகிறேன். நான் என்ன செய்தேன் என்னிடம் ஆசீர்வாதம் வாங்க நினைக்கிறீர்கள் என்று சொல்லுவேன். நீங்கள் ஆசீர்வாதம் வாங்க விரும்புவர்கள் எந்த நேரமும் கடவுள். பரமாத்மா என்று சொல்லுபவர்களிடம் ஆசி வாங்கலாம். நான் எந்த நேரமும் தொழில் என்று அலைபவன்.

நான் நீங்கள் எப்படியாவது இப்படி எல்லாம் எடுத்துக்கொண்டு என்னைபோல் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்க்கிறேன். நீங்கள் என்னடா என்றால் என்னிடம் ஆசி கேட்கிறீர்கள். 

என்னை சரியாக பயன்படுத்துபவர்கள் யார் என்றால் தொழில் அதிபர்கள். இவர்கள் இப்பொழுது என்னை சுற்றி அதிகம்பேர் வந்துவிட்டார்கள். நான் காலையில் எழுந்தவுடன் எனக்கு இன்று எங்கு எல்லாம் மீட்டிங் நடக்கிறது இன்றைய வியாபாரம் எப்படி என்பதை பற்றி பேச்சு தான் அதிகமாக இருக்கின்றது.

என்னைப்போல் நீங்கள் ஆன்மீகத்தில் வந்து உங்களின் தேவைகளை எல்லாம் நிவர்த்திக்கொள்ளுங்கள் அதனை விட்டவிட்டு சாமி, ஆசி என்று எல்லாம் என்னிடம் பேசாதீர்கள்.

என்னிடம் நிறைய பேர்கள் மெயில் அனுப்பி ஆன்மீகத்தைப்பற்றி பேசவேண்டும் என்பார்கள். அவர்களுக்கு நான் மெயில் செய்வதே கிடையாது. ஆன்மீகத்தை பற்றி பேச எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை மாறாக ஆன்மீகத்தை வைத்து எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: