Followers

Saturday, February 1, 2014

குழந்தையும் தெய்வமும்


வணக்கம் நண்பர்களே!
                    மாதத்தின் முதல் தேதி நீண்ட நாட்களாகவிட்டது ஜாதககதம்பத்தில் காபி வித் ஜாதககதம்பம்  படித்து நீண்ட நாள்களாகவிட்டது என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். கொஞ்சம் வேலை அதிகம் அதே நேரத்தில் பதிவுகள் எப்படி இருந்தாலும் குறைந்தது ஒரு நாள் மூன்று பதிவாவது தருவது என்து வழக்கம். இதனை கூட அதிகப்படுத்தி தரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். 

பல நண்பர்கள் கூட நான் வெளியூர் சென்று இருக்கும்பொழுது சார் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் பதிவு வராமல் போரடிக்கிறது என்பார்கள் ஏதோ என்னுள் இருக்கும் அம்மன் இத்தனை பேரையாவது திருப்த்திபடுத்துகிறதே என்று நினைத்துக்கொள்வது உண்டு.

நான் வெளியூரில் இருக்கும்பொழுது கூட எனக்கு அந்த வேலையில் அதிக பணம் வரும் ஆனால் எதையோ மிஸ் பண்ணிட்டோம் என்ற ஒரு உறுத்தல் இருக்கும் அது என்னடா என்றால் உங்களுக்கு பதிவு தரவில்லை என்ற உறுத்தல். எப்படியும் சென்னை சென்றுவிடவேண்டும் என்றே நினைப்பேன். நமது நண்பர்களிடம் கூட இதனைப்பற்றி சொல்லியுள்ளேன். அது பக்கம் இருக்கட்டும். சொல்ல வந்த விசயத்தைப்பற்றி சொல்லிவிடுகிறேன். 

ஒரு மனிதனி்டம் தெய்வம் இருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் உங்களின் வீட்டில் இரண்டு வயதுக்குள் உள்ள குழந்தை இருந்தால் அந்த மனிதனிடம் கொண்டுகீழே விட்டாலே போதும் அந்த குழந்தை அந்த மனிதனிடம் அவ்வளவு அன்பாக பழக ஆரம்பித்துவிடும். முதல் முறை என்று பார்க்காது குழந்தை. அவ்வளவு அன்போடு பழகும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.