Followers

Monday, February 10, 2014

விளக்கம்



வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்களே நேற்றைய பதிவை படித்துவிட்டு தொடர்புக்கொண்டார்கள். தொழில் உதவியை அதிகம்பேர் கேட்டார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்களின் உதவி கிடையாதா என்றும் கேட்டார்கள் அனைவருக்கும் செய்யலாம். 

பொதுவாக நான் இவ்வளவு தான் பணம் என்று கேட்பதில்லை.  நீங்கள் ஒவ்வொரு ஆன்மீகவாதிகளிடம் சென்று ஐம்பதாயிரம் அதற்கு மேல் செலவு செய்துவிட்டு நான் பணம் கேட்காமல் செய்துக்கொடுக்கும்பொழுது எனக்கு அனுப்பும் தொகை வெறும் நூறு முதல் ஆயிரம் ரூபாய்க்குள் அனுப்பினால் நான் எப்படி இறங்கி செய்வேன்.

உங்களிடம் பணமே இல்லை என்றால் நான் இறங்கி இலவசமாக செய்துக்கொடுத்துவிடுவேன். பணத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றினால் நான் அடுத்தமுறை எப்படி செய்வேன். எனக்கு பணம் தேவை அந்த பணம் எதற்கு என்று சொல்லவேண்டியதில்லை ஆனால் நிறைய பணம் தேவைப்படுகிறது. 

ஒரு சில நண்பர்கள் அரசியல்வாதிக்கு செய்யாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். மக்களிடம் இப்படி விழிப்புணர்வை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை பார்க்கும்பொழுது நானே ஆச்சரிப்பட்டேன். இப்பொழுது தேர்தல் வருகின்றதால் அரசியல்வாதிகள் சந்திக்கிறார்கள் நான் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

பெண்களுக்கு ஏன் செய்யவதில்லை என்று கேட்டார்கள். ஒரு சில பதிவுகளை படிக்கும்பொழுது ஒரு சில பெண்களுக்கு செய்வதில்லை என்பது போல் தெரிகிறதே என்று சொன்னார்கள். அனைவருக்கும் பரிகாரம் செய்வது உண்டு ஆனால் ஒரு சில பெண்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் தோஷத்தை குறைக்க வேண்டும் என்றார் நாள்கள் ஆகும். அதுவரை பொறுமை தேவை. 

பொதுவாக இதனை எல்லாம் நம்புவது என்பது கடினம். பதிவுக்கு வருபவர்களாக இருந்தால் சோதிடத்தைப்பற்றி எல்லாம் தெரியும். இதனைப்பற்றி தெரியாத பெண்களிடம் என்ன தான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

எப்படிப்பட்ட பிரச்சினையும் சரிசெய்யமுடியும் ஆனால் அதற்கு என்று ஒரு சில விதிகள் இருக்கின்றன அந்த விதிகளுக்குள் இருந்தால் மட்டுமே செய்வது உண்டு.

நிறைய தொழில் அதிபர்கள் என்னை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்லுவது நான் எப்படி நடந்துக்கொள்கிறேனோ அது போல் நீங்களும் நடந்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பேன். உங்களுக்கு வருமானம் வந்தவுடன் எனக்கு சேரவேண்டிய பணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள். நான் வாயை திறந்து பணம் என்று கேட்கமாட்டேன். அம்மன் திருப்பி அடிக்கும் நிலையும் உண்டு.திருப்பி அடித்தால் நான் கண்டுக்கொள்ளமாட்டேன்.

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக உதவி கேட்கலாம். எதனையும் எதிர்பார்க்கமாட்டேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: