Followers

Sunday, February 16, 2014

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    தொழில் செய்பவர்கள் நிறைய பேர் என்னை தொடர்புக்கொண்டாலும் ஒரு சில சிறிய தொழில் செய்பவர்களும் தொடர்புக்கொள்கிறார்கள். தொடர்புக்கொள்வது தவறு இல்லை. என்னை பொருத்தவரை ஒரு சில தொழிலை தான் நான் தேர்ந்தெடுத்து செய்துக்கொடுப்பது வழக்கம்.

சிறிய தொழிலில் உள்ள வருமானம் உங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதனை வைத்து நீங்கள் தான் உயரமுடியுமே தவிர அதனை எடுத்து அடுத்தவர்களுக்கு கொடுக்கமுடியாது என்பதை முதலில் கவனத்தில் வையுங்கள்.

பொதுவாக அனைவரும் தொழில் செய்யவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் தவறு இல்லை ஆனால் அதற்க்காக கடன் வாங்கி தொழிலை தொடங்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை வந்துவிடும். வேலையில் இருப்பவர்களே அதனை விட்டுவிட்டு தொழில் தொடங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு சிலர் மனைவியின் நகையை வைத்து தொழில் தொடங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அது மிகப்பெரிய தவறு.

கடன வாங்கி தொழிலை தொடங்கும் பொழுது அது நன்றாக சென்றால் பரவாயில்லை. பிரச்சினையில் சிக்கும்பொழுது மட்டுமே சிக்கல் வந்துவிடும். உங்களிடம் இருந்த முதலீடு அனைத்தும் போய்விடும். கடனாளியாகி விடுவீர்கள். கொஞ்சம் இருக்கின்ற நிம்மதியும் போய்விடும்.

ஒரு தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்பது தவறு இல்லை அந்த தொழிலில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். தோல்வியில் முடியும்பொழுது அது சிக்கலாகிவிடும். ஒரு தொழில் தொடர்ந்து பல வருடங்கள் நமக்கு பயன் தரும் வகையில் இருந்தால் மட்டுமே அது தொழிலாக இருக்கமுடியும்.

என்னை தொடர்புக்கொள்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை முடிந்தளவுக்கு உங்களுக்கு ஆலோசனை வழங்குவேன் ஆனால் ஆன்மீகஉதவி வேண்டும் என்று கேட்கும்பொழுது அதற்கு நீங்கள் பணம் தரவேண்டும். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இலவசமாக செய்யலாம் அதற்குபிறகு நீங்கள் பணம் தரவில்லை என்றால் நான் வேறு இடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.

நான் வெளிப்படையாக சொல்லுவதற்க்கு தயங்குவதில்லை. சிறிய தொழிலில் இருந்து வரும் வருமானம் எனக்கு போதாது அதனால் இந்த மாதிரியான தொழிலை நான் எடுத்துக்கொள்வதில்லை

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: