Followers

Sunday, February 2, 2014

பயம் வேண்டாம்


ணக்கம் ண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை தேடி வந்து சோதிடம் பார்த்தார். அவரின் குடும்ப ஜாதகம் அனைத்தையும் என்னிடம் காட்டி சோதிடம் பார்த்தார். நானும் அவருக்கு பலனை சொன்னேன். நீண்ட நேரம் பேசிவிட்டு கடைசியில் அவருடைய ஜாதகத்தையும் அவரின் காதலி ஜாதகத்தையும் காண்பித்தார்.

ஏன் கடைசியில் அவரின் காதலி ஜாதகத்தை காண்பித்தார் என்றால் நான் எதுவும் திட்டுவேன் என்ற காரணத்தால் அப்படி செய்திருக்கிறார். என்னை பொருத்தவரை காதல் செய்வது தவறு என்று எல்லாம் நான் சொல்லுவது கிடையாது. நீங்கள் உங்களின் காதலின் தனிப்பட்ட விசயங்களில் நான் என்ன செய்யபோகிறேன். உங்களின் தனிப்பட்ட விசயம் அது. பதிவில் திட்டுவது எல்லாம் பிரிந்த காதலியை சேர்த்து தாருங்கள் என்று கேட்பதால் திட்டுவது உண்டு.

உங்களை எல்லாம் நான் காதல் விசயத்தில் திட்டுவது எதற்க்காக என்றால் இருவரும் காதல் செய்துவிட்டு பிரிந்த பிறகு தெய்வத்தை நாடுவது தவறு. காதலிக்கும்பொழுதே தெய்வபக்தி இருக்க வேண்டும். அந்த தெய்வபக்தி இருந்தால் உங்களை சேர்த்து வைக்கும். பிரிந்த பிறகு தெய்வத்தை நீங்கள் தான் வேண்டவேண்டும் எங்களை நாடுவது தவறு.

அதே மாதிரி என்னை பார்த்து நீங்கள் பயப்படதேவையில்லை ஏதாவது செய்துவிடுவார் என்று பயம்கொள்ளவேண்டாம். உங்களை வைத்து நான் சம்பாதிக்கவேண்டும் என்றால் அங்கு வாருங்கள் சித்தரை காட்டுகிறேன். இங்கு வாருங்கள் சிவனை காட்டுகிறேன் என்று சொல்லி ஏமாற்றலாம். அப்படி ஒன்றும் செய்வதில்லை. ஒரு நண்பராக வந்து சந்தித்துவிடடு பேசிவிட்டு செல்லலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: