Followers

Tuesday, February 4, 2014

விழிப்போடு செயல்படுவது


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு வேடிக்கை என்ன என்றால் நான் தொழில் செய்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணி ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் தொழில் செய்பவர்களின் லிஸ்டில் இல்லாத பெயர்களில் பணம் வருகிறதே என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். ஒரு சில நண்பர்கள் மாதம் மாதம் எனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் பெயர் மட்டும் வரும். என்னை தொடர்புக்கொள்வதில்லை.

இவர்கள் பணம் அனுப்பும் பெயரை வைத்து பழைய மெயிலில் தேடிபிடித்து பேசியபொழுது தான் தெரிந்தது இவர்கள் அனைவரும் தொழில் செய்துக்கொண்டு இருக்கின்றனர். ஏன் நீங்கள் பணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்துக்கிறீர்கள் ஏதாவது வேண்டுதல் வைத்தீர்களா என்றால் இல்லை சார் நாங்கள் வியாபாரம் செய்கிறோம் உங்களையும் அம்மனையும் நினைத்துக்கொண்டு தொழில் செய்வதால் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்றனர்.

உண்மையில் அப்பொழுது தான் நினைத்தேன். உலகத்தில் மனிதர்கள் இப்படி எல்லாம் இருக்கின்றனரே என்று சொல்லிவிட்டு அவர்களின் ஜாதகத்தை வாங்கினேன். ஏன் என்றால் வேண்டுதல் வைத்தால் மட்டும் அனைத்தும் நடந்துவிடாது அவர்களுக்கு ஜாதகத்தை வைத்து ஒரு சில ஆலோசனைகளை கொடுத்தால் தான் நன்றாக இருககும் என்று எண்ணி இப்பொழுது செய்துவருகிறேன்.

இன்று ஒரு படி மேலை போய் ஒரு சிலர் அம்மன் மேல் வைத்திருக்கும் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. நான் அம்மனின் பூஜை என்று சொன்னவுடன் பணத்தை உடனே போட்டுவிடுவது உண்டு. 

இன்றைய காலத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள மக்கள் செய்யும் விசயங்களில் இது மிகப்பெரிய ஒன்று இப்படிப்பட்ட காரியங்கள் மட்டுமே. விழிப்போடு இருந்து செயல்படுகின்றனர். 

என்னை தொடர்புக்கொண்டு கேட்டால் நான் எதுவும் திட்டினாலும் திட்டுவேன் என்று அவர்களே இப்படி செய்துக்கொள்கின்றனர். அனைத்தும் நம்பிக்கை தான். உங்களின் உணர்வுகளுக்கு மற்றும் நம்பிக்கைக்கு மதிப்புக்கொடுத்து யார் வேண்டுமானாலும் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: