Followers

Friday, February 14, 2014

அன்பான அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே!
                          ஜாதககதம்பம் என்பது ஒருவன் சென்ற ஆன்மீகபயணத்தை உங்களுக்கு சொல்லுவதற்க்கு தானே தவிர ஜாதககதம்பம் அனைத்தையும் செய்து தராது. நான் கற்ற விசயத்தை வைத்து வரும் நபர்களுக்கு ஒரளவு நன்மையை மட்டும் செய்து தரும். அனைத்தையும் என்னிடம் இருந்து எதிர்பார்க்ககூடாது. நான் அந்த ஒரு காரணத்தால் மட்டுமே பணம் வாங்காமல் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். எந்த ஒரு விசயத்திலும் நான் செய்யும் செயல் என்னை அடிமைப்படுத்தகூடாது என்று தான் இப்படி இருக்கிறேன்.

பல பேர் ஜாதககதம்பம் கடவுள் எழுதுவது போல் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அது தவறான ஒன்று. உங்களைப்போல் ஒரு மனிதன் தான் எழுதுகிறான். உங்களை போல் அனைத்து ஆசையும் எனக்கு உண்டு. அதனை மறவாதீர்கள். என்னை கடவுள் போல் நினைக்காதீர்கள். 

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். நான் கற்ற அனைத்தும் எனது குடும்பத்தில் உள்ள நபர்களுக்காக எடுத்தேன். அதனை குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு மட்டுமே செய்யமுடியும். எனக்கும் எனது குடும்பத்திற்க்கும் செய்வதற்க்காக பல விசயங்களை நான் தேடினேன். ஏற்கனவே சொல்லியுள்ளேன் சுயநலத்திற்க்காக எடுத்ததை அடுத்தவர்களுக்கு கொடுக்கிறேன். அனைத்தையும் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.

நான் சொல்லும் விசயம் நான் தேடினேன் கிடைத்தது அதுபோல் நீங்களும் தேடுங்கள் என்று தான் சொல்லுகிறேன். அம்மன் என்பது ஒரு பொதுசக்தி அதனிடம் நீங்களே வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன். என்னிடம் நீங்கள் எதுவும் சொல்லதேவையில்லை. நீங்கள் விரும்பினால் பணம் அனுப்பலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம். 

ஒருவர் எனக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளதை கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.  

என் ஜாதகத்தை மறுபடியும் பாருங்கள் ஏதாவதுசெய்யமுடியுமா?  ஏநெனில் எனக்கு வாழவேபிடிக்கவில்லை. எப்போதும் மரணத்திற்கு தயாராக உள்ளேன் . பூமிக்கு பாரமாய் உள்ளேன்.  நான் போனால் வேறு ஒரு ஜீவன் பிறந்து சாதிக்கும் அல்லவா?

என்றாவது என் மெயில் நினைவுக்கு வந்தால் அம்மனிடம் கேளுங்கள் இந்த பெண்ணிற்கு உதவி செய்யலாமா? என்று. அம்மன் வேண்டாம் என உத்திரவு கொடுத்துவிட்டால் வாழ்வதற்கு மந்திரங்கள் இருப்பதுபோல் மரணத்திற்கு ஏதாவது இருக்குமா? என அப்பெண் கேட்கிறாள் என கேளுங்கள். அடுத்த பிறவியில் மீதி கர்மாவை அனுபவித்துக்கொள்கிறேன்.  நிம்மதி இல்லாத வாழ்வை வாழ்வதற்கு மற்றவர்களுக்கு வாழ இடம் தரலாம் அல்லவா? அம்மனிடம் கேளுங்கள் என்னைப்பற்றி அவளுக்குத்தெரியும் நான் வாழும் வாழ்க்கை. தங்களிடம் பேசாவிட்டாலும் தங்கள் பதிவுகளை தினமும் படிக்கிறேன்.
முடியும் போது நினைவிருந்தால் ஏதாவது பதில் சொல்லலாம் என நினைத்தால்  சொல்லுங்கள் அவசரம் இல்லை.. தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கவேண்டாம். அம்மன் பதில் சொல்லச்சொன்னால் சொல்லுங்கள் போதும் என்னால் முடிந்த்தை அம்மனுக்கு செய்ய ஆசை  நிறைய எல்லாம் முடியாது நான் எதுவும் சம்பாதிக்கவில்லை. நானே என் கணவரிடம் வேலைக்காரியாகத்தான் இருக்கிறேன் இருந்த்தாலும் ஆசை . அம்மன் அவள் பூஜைக்கு என் பங்கை வாங்க விரும்பினால்தான்  அமைப்பு பாக்கியம் இருந்தால் தான் நானும் தர முடியும்

பல பேர் இப்படி எனக்கு மெயில் அனுப்பினால் ஏழைமக்களுக்கு உதவதற்க்கு இந்த தளம் மட்டும் தான் இருந்தது இதனையும் மூட வேண்டிவரும். இப்படி ஏகாப்பட்ட மெயில் வருகிறது. ஒருவர் மட்டும் அனுப்பிய மெயிலை தந்துள்ளேன். பல மெயில் மற்றும் போன்கால்கள் வருகிறது. பக்தி இருக்கவேண்டிய தான் அது அதிகம் போய்விட்டால் பிரச்சினை வந்துவிடும்.

நீங்கள் நினைப்பது போல் நான் நல்லவன் என்பது எல்லாம் கிடையாது. எனக்கு தேவை என்னவே அதனை ஆன்மீகவழியில் பெறுகிறேன். நீங்கள் கேட்கவேண்டியது எல்லாம் சந்நியாசி அல்லது மகான்களிடம் சென்று கேளுங்கள். தமிழ்நாட்டில் பல பேர் இருக்கின்றார்கள் வாருங்கள் அதனை செய்து தருகிறேன் இதனை செய்துதருகிறேன் என்று கேட்கிறார்கள் அவர்களிடம் சென்று கேட்டுக்கொள்ளுங்கள். இதனை எல்லாம் அன்போடு தவிர்த்துவிடுவது நல்லது.

ஜாதககதம்பம் எழுதுகிறேன் என்றால் ஒருவனை பார் ஆன்மீகவழியில் அவனுக்கு தேவையானவற்றை தேடி எடுத்துக்கொள்கிறான் அது மாதிரி நாமும் சென்று தேடுவோம் என்ற நம்பிக்கை வருவதற்க்கு மட்டுமே. தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள்.

யார் செத்தாலும் எனக்கு ஒன்றும் மனதில் வலி இருக்காது ஆனால் என் பேரை சொல்லி ஜாதககதம்பத்தை பேரை சொல்லி இறக்காதீர்கள். நான் செய்த கர்மத்தை போக்குவதற்க்கே நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். இதில் நீங்கள் வந்து தொந்தரவை ஏற்படுத்தாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: