Followers

Tuesday, February 4, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்றைய குரு பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். குரு ஒன்றும் அவர்களின் சொத்து கிடையாது என்று சொன்னார்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைவருக்கும் பொதுவானவை தான் அவர்கள் மாதிரி நீங்கள் அறிவாளியாக இருந்தால் நலலது தானே. இன்றைய காலத்தில் அனைவரும் அறிவாளியாக இருக்கின்றனர். நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. இடஒதுக்கீடு என்ற விசயத்தில் மட்டும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. மனிதனை நினை கடவுளை மற என்று சொல்லும் கட்சிகள் பொதுவாக ஒரு தேர்வு வைத்து அனைவரையும் வேலைக்கு எடுக்கலாம்.

இன்றைய காலத்தில் பிராமணர்களின் குடும்பமும் பல சிதைந்துவிட்டது அதற்கு காரணம் அவர்கள் தன்னுடைய வழியை ஒழுங்காக பின்பற்றாத காரணத்தால் தான் இப்படி ஆகிவிட்டது. ஏகாப்பட்ட பிரச்சினை அவர்களின் குடும்பங்களில் இருக்கின்றது. ஒழுங்கான ஒரு பிராமணர் என்றால் அவர்களுக்கு குரு கிரகம் கெடுக்ககூடாது. இன்றைய பிராமணர்களின் ஜாதகத்தில் 90 சதவீதம் கெட்டுவிட்டது. பிற இனத்தில் பார்த்தால் குரு கிரகம் உச்சம் பெற்று இருக்கின்றது. இதனை எங்கு சென்று சொல்லுவது என்றே தெரியவில்லை.

தெய்வபக்தி நன்றாக இருந்தால் தான் குரு கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமையும். பிற இனங்கள் கடவுளுக்கு பயப்பட்டுக்கொண்டு நல்ல பக்தியை செலுத்தி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குரு கிரகம் நன்றாக இருக்கின்றது. பிராமணர்கள் கடவுளுக்கு பூஜையை கடமைக்கு என்று செய்து முடிந்தளவு தவறை செய்கின்றனர். பிராமணர்களுககு பிறக்கும் குழந்தைகள் குரு சண்டாளகுருவாக மாறிவிடுகிறார். அப்புறம் எப்படி உருப்படும். 

எந்தளவுக்கு பக்தியை செலுத்துகிறோமோ அந்தளவுக்கு குருகிரகம் மூளையை கொடுக்கிறது. அதனை வைத்து நீங்கள் சாதித்துக்கொள்ளவேண்டியது தான். ஒழுங்கான பக்தியை யார் செலுத்தினாலும் குரு கிரகம் அவர்களுக்கு நல்லதை செய்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.