Followers

Friday, February 14, 2014

வேடிக்கை



ணக்கம் ண்பர்களே!
                    இன்று காலை ஜாதககதம்பத்தில் வழியாக நண்பரான நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து காதலர் தின நல்வாழ்த்துக்கள் என்றார். நானும் சொல்லிவிட்டு ஏன்பா எனக்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொல்லுகிறாய் என்றேன்.

நீங்கள் தான் என்னுடைய காதலுக்கு உதவவில்லை அதனால் உங்களுக்கு காதல்வாழ்த்து சொல்லி வெறுப்பு ஏற்றுகிறேன் என்றார். அடகடவுளே என்று நினைத்துக்கொண்டு சரிப்பா என்று சொ்ல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

பாவம் என்ன செய்வது கிரகங்கள் செய்யும் லீலையில் இவர்கள் சிக்கி தவிக்கிறார்கள். ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று தேடும்பொழுது ஆன்மீகவாதிகள் கண்ணிற்க்கு தெரிகிறார்கள். ஆன்மீகவாதிகள் சேர்த்து வைத்தால் பிறகு ஏன் இத்தனை காதல் தோல்வியை சந்திக்கிறது.

பொதுவாக ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியில்லை என்றால் காதல் தோல்வியை சந்திக்கும். அப்பொழுது தானே வாழ்க்கையில் வெறுப்பு வரும். அந்த வெறுப்பு ஆன்மீகத்தின் பக்கம் திருப்பிவிடும். அப்புறம் ஒவ்வொரு சாமியாரிடம் சென்று தத்துவம் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

 சோதிடத்தில் அதிகப்பட்சமாக கிரகங்கள் பாதிக்கும்பொழுது நீங்கள் காதலில் விழுவீர்கள் அந்த காதல் வழியாக மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கவேண்டிவரும். உங்களின் திருமணவாழ்க்கையும் அந்தளவுக்கு நன்றாக அமையாது. நீங்களாகவே ஆன்மீகவாழ்க்கைக்கு திரும்பி உங்களின் இல்லறவாழ்க்கையும் நன்றாக மாற்றிக்கொள்ளுங்கள்.

ஆன்மீகவழியில் பிரிந்த தம்பதினரை சேர்க்கமுடியுமா என்று ஒரு சிலர் கேள்வி கேட்டனர்.

ஆன்மீகவழியில் தம்பதினரை சேர்க்கமுடியும். அதுவும் மிகவும் கஷ்டப்பட்டு செய்யவேண்டும். இருவரும் சண்டை சச்சரவு போட்டுவிட்டு பிரிந்தால் சேர்க்கலாம். அதுவும் நாங்கள் உட்கார்ந்து அவர்களின் மனதை சாந்தப்படுத்தி சேர்க்கவேண்டும். அப்படி சேர்த்தால் மறுபடியும் பிரச்சினை வராமல் இருப்பதற்க்கும் செய்யவேண்டும். ஒரு இரவு முழுவதும் நாங்கள் உட்கார்ந்தால் மட்டுமே சாத்தியம்.

காதலருக்கு செய்யுங்கள் என்று சொன்னால் அதற்கு நான் சம்மதிப்பதில்லை. இருவருக்கும் காதல் மட்டும் இருந்தால் பரவாயில்லை அதை மீறி என்ன என்னவே நடைபெறும்பொழுது அந்த பக்கம் நான் சென்றால் அம்மன் திருப்பி என்னை அடிக்கும் அதனால் அந்த பக்கம் செல்வதில்லை.

நான் விடியவிடிய உட்கார்வது என்பது கஷ்டமாக இருக்கின்றது.  ஆன்மீகத்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும் ஆனால் ஆன்மீகவாதி அதற்கு தயார் இல்லை. இன்றைய தேதியில் 100 சதவீதம் அனைத்திலும் சாதிக்கமுடியும். எனக்கு என்று ஒரு சில விதி இருக்கின்றது. அந்த விதியை நான் மீறுவதில்லை. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: