Followers

Sunday, February 16, 2014

ஆன்மீக அனுபவங்கள் 155


வணக்கம் நண்பர்களே!
                    பொதுவாக அனைத்து சாமியார்களும் என்ன சொல்லுவார்கள் என்றால் தியானம் செய்யுங்கள் யோகா செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். இது தவறு இல்லை ஆனால் நீங்கள் தெய்வங்களை வைத்து நீங்கள் வேலை செய்யவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பூஜையின் மீது அதிககவனம் செலுத்தவேண்டும். 

பூஜை செய்வதால் மட்டுமே தெய்வங்கள் திருப்தி அடையும் அதன் வழியாக நீங்கள் வேண்டுவதை பெறலாம். நான் ஒவ்வொரு நாளும் பூஜை முறையில் தான் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறேன். எப்பொழுதாவது மட்டுமே தியானம் செய்வது உண்டு.

பூஜையும் ஒவ்வொரு நாளும் வித்தியாசம் வித்தியாசமாக செய்வது உண்டு. ஏகாப்பட்ட பூஜை முறைகளை நான் கையாண்டு வருகிறேன். அதைப்போல் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களும் வித்தியாசம் இருக்கின்றது. பூஜைக்கு என்று விதவிதமான மூலிகைகளை பயன்படுத்துகிறேன்.

பல பூஜைகள் செய்யும்பொழுது மட்டுமே தெய்வங்கள் மனமிரங்கி நமக்கு வேலையை செய்துக்கொடுக்கிறது அதைபோல் ஒவ்வொரு வேலைகளுக்கும் ஒவ்வொரு விதமான பூஜை முறைகளை கையாளுகிறேன்.

நீங்கள் தெய்வங்களை வசப்படுத்தவேண்டும் என்றால் பூஜை முறைகளை செய்யுங்கள்  அது ஒரு நாளில் முடியகூடாது பல நாட்கள் செய்யும்பொழுது மட்டுமே தெய்வங்கள் உங்களை தேடிவரும். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் விருப்பம் உள்ளவர்கள் பூஜை முறையில் ஈடுபட்டு தெய்வத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: