Followers

Friday, February 28, 2014

மறுபிறவி பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த பதிவில் சொல்லிய கருத்தில் உங்களுக்கு ஒரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் ஒரு சில தகவல்களை பார்க்கலாம். ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியாக தான் எடுக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இது மனித பிறவி மட்டும் இல்லை பல உயிரனங்களாக எடுத்து வந்து மனித பிறவிக்கு வருகிறது. மனித பிறவி வந்து அதில் இருந்து உயர்ந்த நிலையான கடவுளின் நிலையை அடைய மனிதபிறவி எடுக்கிறது. 

சோதிடத்தில் கூட இதனை நீங்கள் தெரிந்து இருக்கமுடியும் என்ற நினைக்கிறேன். எந்த உயிரனத்தில் இருந்து மனித பிறவி எடுத்தது என்பதை கூட சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள். அதனைப்பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆட்டில் இருந்து வந்த பிறவி மற்றும் நாயில் இருந்து வந்த பிறவி என்று சொல்லியுள்ளார்கள்.

ஒரு ஆத்மா மனித பிறப்பில் இருந்து மட்டும் வந்தது இல்லை அனைத்து உயிர்களில் இருந்து தான் வந்தது என்பதை இதனை வைத்தே தெரிந்துக்கொள்ளமுடியும். உலகத்தில் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே செல்லுகிறது. ஒரு ஆத்மா மனித பிறப்பு மட்டும் எடுத்து இருந்தால் இத்தனை மக்கள் வருவதற்க்கு வழியே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

மனிதபிறப்பிலேயே பல ஜென்மங்கள் எடுக்கிறது. மனிதப்பிறப்பு ஒரு முழுமையான படைப்பாக தான் வருகிறது. மனிதப்பிறப்பை வைத்து நீங்கள் கடவுளிடம் செல்லுவதற்க்கு பல வழிகள் இருக்கின்றது ஆனால் யாரும் அதனை விரும்புவதில்லை என்பது தான் துரதிஷ்டம்.

மனிதப்பிறப்பு என்பது மகத்தான படைப்பாக இருந்தாலும் அதில் மனிதன் செய்யும் தவறு அதிகமாக இருக்கின்றதால் அவனின் ஜென்மங்கள் அதிகமாகி மறுபிறவி மறுபிறவி என்றே சென்றுக்கொண்டே இருக்கின்றது.

தொடர் ஆரம்பித்து மூன்று பதிவுக்குள் பல பேர் ஜாதகத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். கொஞ்சம் பொருங்கள் அனைத்தையும் பார்க்கலாம். உங்களின் ஜாதகத்தை வைத்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

முதலில் மறுபிறவியை பற்றி சோதிடத்தில் உள்ள தகவலை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: