Followers

Sunday, February 16, 2014

உன்னால் முடியும்


வணக்கம் நண்பர்களே!
                    என்னால் முடியும் என்று சொல்லி தான் என்னை நம்பி பணத்தை தொழிலில் முதலீடு செய்கின்றனர். ஆன்மீகவழியில் நின்று நான் சாதித்து கொடுப்பேன் என்று சொன்னதால் தொழில் செய்வர்கள் தொழிலில் முதலீடு செய்கின்றனர். இப்பொழுது எல்லாம் நான் சொல்லவில்லை என்றால் 

என்னோடு தொழில் தொடர்பு வைத்திருப்பவர்கள் இறங்குவதில்லை. என்னை நம்பி பணம் போடுபவர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் அது எனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சும்மா தொழிலுக்கு செய்கிறேன் என்று கதை எல்லாம் விடமுடியாது.தொழில் தோல்வி அடைந்தால் போடும் பணத்தில் ஒரு சதவீதம் பணத்தை கொடுத்து என்னை காலி செய்யகூட தயங்கமாட்டார்கள். 

என்னிடம் வந்து ஏதாவது ஒரு தோஷத்திற்க்காக வந்து நிற்பவர்களுக்கு எல்லாம் நான் அந்தளவுக்கு முயற்சி எடுத்து செய்வதில்லை. ஐம்பது சதவீதம் செய்வேன். அதுவும் ஆளை பார்த்து தான் செய்கிறேன். ஏன் என்றால் இதற்கு செய்யும் வேலையையை ஒரு தொழில் செய்பவர்களுக்கு செய்யும் பொழுது அதில் இருந்து வரும் பணம் எனக்கு அதிகம். அதனை வைத்து பல பேரை காப்பாற்றமுடியும். 

எனக்கு கற்றுக்கொடுத்த குரு என்னிடம் சொல்லும் பொழுது என்று நீ தோற்கிறாயோ அன்றே நீ தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்று தான் என்னிடம் தொழிலை கற்றுக்கொடுத்தார். அதனை செய்வேன் இதனை செய்வேன் என்பது வார்த்தையால் சொல்லுவது கிடையாது.அது உண்மை. என்னிடம் தொழில் செய்வதற்க்கு என்று வாருங்கள் அப்பொழுது பாருங்கள் எனது வேலையை.

பதிவுகளில் எழுதும் அனைத்து விசயங்களும் செய்துக்கொண்டு தான் இருக்கின்றேன். செய்யாமல் இல்லை. இதனை படித்துவிட்டு நீங்களும் முயற்சி செய்யுங்கள். என்னை போல் நீங்களும் மனிதர்கள் தான் நான் செய்யும்பொழுது உங்களாலும் செய்யமுடியும் என்று நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: