Followers

Monday, February 17, 2014

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    மனிதர்களுக்கு அதிகப்பட்ச ஆசையாக எது இருக்கும் என்றால் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்ற ஆசை. ஒவ்வொரு மனிதருக்கும் இது கண்டிப்பாக இருக்கும். அதற்க்கான வழிகளில் பல பேர் நாடினாலும் அனைவரும் அதில் வெற்றி பெறுவதில்லை. பொதுவாக ஆன்மீகவாதிகள் இளவயதில் இறப்பதில்லை. ஒரு சிலரை தவிர. இதற்கு காரணம் மிகுந்த விழிப்போடு இருக்கின்றனர்.

பல விதத்திலும் அவர்கள் தன் உடம்பை பேணிக்காத்தாலும் அவர்களின் இஷ்டதெய்வங்களிடம் அவர்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று பிராத்தனை வைக்கிறார்கள். இந்த பிராத்தனையை நீங்களும் வைக்கமுடியும்.

காயத்ரி மந்திரம் செய்பவர்கள் தினமும் செய்து முடித்தவுடன் இந்த பிராத்தனையை நீங்கள் வைத்துவிடுங்கள். வைத்துவிட்டு உங்களின் பிற வேண்டுதலை வைக்கலாம். மிக பெரிய ஒரு விசயம் மனிதப்பிறப்பு எடுத்தது கிடைக்கின்ற வாழ்நாளை நன்றாக தான் வாழ்ந்துவிட்டு போகவேண்டியதானே. உடனே வேண்டுதலை வைத்துவிடுங்கள். 

இதனை தான் நான் போனில் தொடர்புக்கொண்டு சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பதிவிலேயே சொல்லிவிட்டேன்.வேண்டுதல் வைத்தால் மட்டும் போதாது. உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். தீயவற்றை தரும் செயலில் இறங்காமல் உடலை ஒழுங்காக பராமரியுங்கள். நீண்ட நாட்கள் வாழலாம். 

எங்களைப்போல் உள்ளவர்களுக்கு பிறரின் கர்மா ஏறும் ஆனால் உங்களுக்கு உங்களின் கர்மா மட்டும் தான். நாங்களே நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று வழி செய்யும்பொழுது நீங்கள் செய்யகூடாதா என்ன?

பாண்டிச்சேரி பகுதியில் காயத்ரி மந்திரம் செய்பவர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: