Followers

Sunday, February 16, 2014

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில காரணங்களால் புதிய அலுவலகத்தை பார்க்காமல் வைத்திருக்கிறேன். தற்பொழுது நான் தங்கி இருக்கும் அறையில் இருந்து தான் பதிவை தருகிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் பதிவுகளை இனி தருவேன். அதே நேரத்தில் தற்பொழுது என்னை நேரில் சந்திக்கமுடியாது. போனில் அல்லது மெயில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அலுவலகத்தை மூடிவிட்டவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு உங்களுக்கு பணஉதவி வேண்டுமா என்று கேட்டார்கள் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜாதககதம்பத்தில் பதிவுகள் வரவேண்டும் என்று நினைத்து இதனை செய்கின்றனர். பதிவுகளை நான் எப்படியும் கொடுத்துக்கொண்டே இருப்பேன். 

நேரில் சந்திப்பவர்கள் குறைவு தான் இருந்தாலும் ஒரு சில நண்பர்கள் சோதிடம் பார்க்கவேண்டும் என்றால் அலுவலகம் வேண்டும் என்று சொன்னார்கள் அவர்களுக்கு எல்லாம் சொல்லுவது கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக புதிய அலுவலகம் திறக்கலாம்.

எனது அறையில் இருப்பதனால் அம்மனை வைத்து ஒரு சில வேலைகளை செய்வதற்க்கு எனக்கு எளிதாக இருக்கின்றது. என்னை மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அம்மன் எனக்கு தந்துள்ளதாகவே நினைக்கிறேன்.அம்மனை வைத்து அற்புதமான ஒரு வேலையை செய்துக்கொண்டிருக்கிறேன். அதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: