Followers

Wednesday, February 5, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனை வைத்து யாரையும் தாக்குதல் செய்வது என்பது மட்டும் ஒருபோதும் செய்வதில்லை. என்னை அடித்தால் கூட அடி வாங்கிக்கொண்டு செல்வோமே தவிர அம்மனை வைத்து அவர்களை எதுவும் செய்வதில்லை. 

அம்மனின் ஒரு ஆளை தாக்குதல் ஆரம்பித்தால் அவ்வளவு தான் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது அந்தளவுக்கு தாக்குதலை நடத்திவிடும். அவர்களின் நிலை சொல்லவே முடியாது. பிறர்க்கு இப்படி நடைபெற்றுவிட்டால் அவர்களின் நிலையை நாம் பார்க்கவே கஷ்டமாக இருக்கும். 

ஒரு சில நேரங்களில் அதுவாகவே ஏதாவது செய்துவிட்டும் வருவது உண்டு. எங்களுக்கு ஏதாவது ஒருவர் பயங்கரமாக பிரச்சினை கொடுக்கிறார் என்றால் அவர்களை திசைதிருப்பிவிட்டு வந்துவிடும்.அதுமட்டும் தான் செய்யும்.

நான் இப்பொழுது தியானம் என்பது இருப்பதில்லை. காரணம் அது எதையாவது செய்துவிட்ட வந்துவிடும் அப்புறம் புகார் வந்துவிடும் என்பதால் நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் முன்னால் சரி நீண்ட நாள்கள் சென்றுவிட்டதே கொஞ்சம் தியானம் இருந்து பார்க்கலாம் என்று அமர்ந்தேன். அதிகப்பட்சம் ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது. உடனடியாக எழுந்துவிட்டேன். அந்த ஐந்து நிமிடம் அமர்ந்தர்க்கு நான் எங்கு எல்லாம் சின்ன கோபத்தை வைத்துவிட்டு வந்தேனோ அங்கு எல்லாம் பிரச்சினையை கிளப்பிவிட்டு வந்துவிட்டது.

என்னடா இப்படி பிரச்சினையை கிளப்பிட்டு வந்துவிட்டதே என்று மறுநாள் அதனை எல்லாவற்றையும் சரி செய்த பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. வெறும் ஐந்து நிமிடம் செய்தற்க்கு இந்த பிரச்சினை. இப்பொழுது எல்லாம் சும்மா இருந்தால் போதும் என்று இருந்துவிடுவேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

Dear sir
The other religious peoples where they get from the power
thanks