Followers

Sunday, February 2, 2014

அம்மன் தரும் வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பல பேர்களுக்கு அம்மன் நல்லது செய்துக்கொண்டிருக்கிறது. கலியுகத்தில் நம்பமுடியாத விசயங்களை செய்து தருகிறது. அப்படி அம்மன் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கும்பொழுது அது கொடுக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தும்பொழுது மட்டும் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வரும். 

அம்மன் வாய்ப்பை கொடுக்கும்பொழுது சரியாக பயன்படுத்தவேண்டும். ஒரு நிகழ்ச்சி ஒன்றை சொல்லுகிறேன். ஒருவர் என்னிடம் வந்தார் அவர் உதவி கேட்டு வந்தார். உதவி கேட்டு வரும்பொழுது நான் அவரின் வியாபாரத்தின் அளவு என்ன என்று கேட்டுப்பார்த்தேன். பல கோடிகளை தாண்டுகிறது. பல கோடி போட்டு அந்த வியாபாரம் இன்னமும் பல கோடிகளை போட்டால் தான் வியாபாரம் செய்யமுடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.அப்படியே விட்டுவிட்டாலும் போட்ட முதல் வீணாகபோய்விடும்.

அவரிடம் ஒன்றும் இல்லை நீங்கள் அம்மனின் கோவிலுக்கு வந்து ஒரு பூஜை செய்யுங்கள் என்று சொன்னேன். குறைந்தது மூன்று ஆயிரம் செலவாகும் என்று சொன்னேன். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் விடாமல் மீண்டும் மீண்டும் அதேயே சொல்லிக்கொண்டே இருந்தேன். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அவரை சோதனை செய்வதற்க்கு இது தான் சரியான ஒரு வாய்ப்பு.

பல கோடி ரூபாய் வீணாக போட்டவருக்கு குறைந்தது சென்று வர பூஜை செலவு எல்லாம் சேர்த்து ஐந்தாயிரம் தான் தேவைப்படும் ஆனால் அதனை செய்ய அவரின் மனம் இடம் தரவில்லை.அவர் என்னிடம் நீங்கள் மாதாந்திர பூஜை செய்வீர்கள் அல்லவா அதற்கு பணம் தருகிறேன் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பணத்தை தந்தார். பூஜைக்கு  பணத்தை கொடுப்பதை நாம் மறுக்ககூடாது என்று வாங்கிக்கொண்டேன். என்னுடைய கணிப்பு நான் தொடர்ந்து கேட்டதால் அதனை கொடுத்து இருக்கவேண்டும்.அவர் கொடுத்த பணத்திற்க்கு ஒரளவு நடைபெறும்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பல கோடி செலவு செய்து ஒரு தொழிலை தொடங்கும்பொழுது ஆயிரம் ரூபாய் ஒரு தெய்வத்திற்க்கு செலவு செய்தால் அந்த பல கோடி காப்பாற்றப்படும். இதனை தெரியாமலேயே பல பேர்கள் நஷ்டத்தை அடைகின்றனர்.

என்னிடம் ஒருவர் பணம் கொடுத்தால் கண்டிப்பாக அந்த பணத்தை பல மடங்கு திருப்பிக்கொடுப்பதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யாமல் இருக்கவே மாட்டேன். எப்படியும் அது திரும்பி பல மடங்கு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: