Followers

Tuesday, February 4, 2014

கடவுள்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது என்னிடம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன். என்னோடு வந்தவர்களுக்கு எல்லாம் நிறைய நடந்தது என்று சொன்னார்கள் எனக்கு ஒன்றும் நடைபெறவில்லை என்று சொன்னார். வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அவர் ஒரு சோதிடராகவும் இருந்ததாக என்னிடம் சொன்னார். 

நான் சொல்லி கிரிவலம் சென்றீர்களாக என்று கேட்டேன். நீங்கள் சொல்லி நான் செல்லவில்லை. ஒரு ஆன்மீகவாதி சொல்லி நான் சென்றேன் என்றார். உங்களுக்கு நடக்கவில்லை என்றால் என்னிடம் ஏன் வந்து கேட்கிறீர்கள் அவரிடமே கேட்கவேண்டியது தானே என்றேன். 

அவரிடம் கேட்டதற்க்கு உன்னுடைய கர்மா குறைந்தவுடன் உனக்கு நல்லது நடைபெறும் என்று சொன்னார் என்றார். உங்களு்க்கு எல்லாம் அறிவு என்பதே இருக்காதா என்று என் மனம் கேட்டது. அவரிடம் கர்மாவின் கணக்கு குறைந்தவுடன் நடைபெறும் என்றால் எதற்கு நீ என்று கேட்கவேண்டியதானே என்றேன். 

நண்பர்களிடம் நான் சொல்லும் வார்த்தை இந்த காலத்தில் ஆன்மீகவாதி எதையாவது சொல்லுகொண்டு இருப்பான். அவனுக்கு பிழைப்புக்கு சொல்லுவான் அதனை கேட்டுக்கொண்டு உங்களின் பணத்தை செலவு செய்துக்கொண்டு போகாதீர்கள். பல குடும்பங்களில் கணவன் மனைவி பிரச்சினைக்கு காரணமே இப்படிப்பட்ட ஆன்மீகவாதிகள் எதையாவது சொல்லி அதனை பெண்கள் செய்து பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று எண்ணி எதையும் திங்கலாம் என்று உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்ளாதீர்கள். உலகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் விடை உங்களிடமே இருக்கின்றது. கட உள் என்று தான் சொல்லியுள்ளார்களே தவிர கட வெளியே என்று சொல்லவில்லை. உங்களை அறிந்தால் போதும். அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். வெளியில் தேடினால் பிரச்சினை தான் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: