Followers

Saturday, August 2, 2014

ஆன்மீக அனுபவங்கள் பகுதி 169


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய நண்பர்கள் ஆத்மாவைப்பற்றி உணரவேண்டும் என்று நினைப்பார்கள் அதனால் இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். ஆத்மாவைப்பற்றி நிறைய எழுதியிருந்தாலும் இந்த தகவலும் உங்களுக்கு பயன்படும்.

தனியாக உங்களின் வீட்டில் அமருங்கள். இரவில் யாரும் உங்களின் வீட்டில் இல்லாத நேரத்தில் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு தனியாக அமருங்கள். அப்பொழுது உங்களை கவனித்து பாருங்கள். உங்களுக்குள் ஒன்று திரு திருவென்று விழித்துக்கொண்டு இருக்கும். அது உங்களின் கண்கள் கிடையாது அது உங்களின் ஆத்மா. இது ஒரு எளிய முறை.

ஆத்மாவின் ஒளி என்ன என்று பார்க்க ஒரு வழியை சொல்லுகிறேன். தனியாக எங்காவது இருட்டில் செல்லுங்கள். உங்களின் உடலில் உள்ள ஆத்மாவே உங்களுக்கு ஒரு வழியை காட்டும். அதாவது ஒரு சிறிய ஒளிப்போல் காட்ட ஆரம்பிக்கும். முதலில் இது தெரியவராது. இருட்டில் செல்ல செல்ல இது தெரிய வரும். இது வானத்தில் இருந்து வரும் ஒளி கிடையாது. வானத்தில் இருந்தும் ஒளி வரும் அதே நேரத்தில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மாவின் ஒளியும் தெரியும்.

இதனை முதல் தடவையே அறியமுடியும் ஆனால் உங்களின் மனது பலதரப்பட்ட பழக்கவழக்கத்தில் சிக்கி இருப்பதால் உடனே இதனை அறியமுடியாது. மனது ஆன்மீகத்தைப்பற்றி அதிகம் சிந்திக்கும்பொழுது இந்த பயிற்சி நன்றாக உங்களுக்கு கை கொடுக்கும்.

இன்றே நீங்கள் செய்து பாருங்கள். நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் இதனைப்பற்றி நன்றாக தெரியவரும். இது எளிதான ஒரு வழி. உங்களின் ஆத்மாவை நீங்களே தரிசிப்பது ஒரு பெரிய பாக்கியம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: