Followers

Wednesday, August 13, 2014

ஆன்மீக அனுபவங்கள் பகுதி 170


வணக்கம் நண்பர்களே!
                    நான் சும்மா எதனை சொன்னாலும் அதில் ஏதாவது ஒரு சின்ன தகவலாவது இருக்கும். அதனை உங்களின் ஆன்மீககண்ணோட்டத்தோடு பார்க்கும்பொழுது அதனைப்பற்றி கொஞ்சவாது புரிந்துக்கொள்ளமுடியும்.

குழந்தை இல்லை என்றால் அதற்கு நான் வழி செய்து தருகிறேன் என்று பதிவில் சொல்லிருந்தேன். எந்த மருந்தும் இல்லாமல் அம்மனை வைத்து இதனை செய்து தருகிறேன் என்று சொல்லிருந்தேன்.

அனைவரும் அந்த பதிவை படித்தீர்களே தவிர அது எப்படி சாத்தியம் என்று ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. அட கேள்வி தான் கேட்கவில்லை சிந்தித்து பார்த்தால் அது எப்படி சாத்தியம் என்று என்னை தேடி வந்து இருக்கமுடியும். யாரும் அதனைப்பற்றி சிந்தனை செய்யவில்லை என்று தோன்றுகிறது. இவருக்கு பணம் இல்லை என்றால் எதாவது செய்துக்கொண்டு இருப்பார் என்று நினைத்த காரணத்தால் இதனைப்பற்றி கேட்கவில்லை.

இந்த காலத்தில் கவுண்டிங் பிரச்சினை அதிக பேருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அவரால் ஒரு குழந்தையை உருவாக்கும் தகுதியை இழந்துவிட்டார். என்று அர்த்தம் கொள்ளலாம். இப்படிப்பட்டவர்களுக்கே என்னால் அவருக்கு குழந்தையை உருவாக்கி கொடுக்கமுடியும்.

நான் சொல்லவந்த விசயத்திற்க்கு வருகிறேன். அம்மனை வைத்து நான் செய்து தருகிறேன் என்ற சொல்லிருந்தேன். படைக்கும் தொழிலை அம்மனை வைத்து செய்து தருகிறேன் என்று சொன்னேன் அல்லவா. நீங்கள் இந்த இடத்தில் என்னை கேள்வி கேட்ருக்க வேண்டும். அம்மனை வைத்து எப்படி படைக்கும் தொழிலை செய்யமுடியும் என்று கேள்வி கேட்ருந்தால் உங்களை கூப்பிட்டு எனது தொழில் முழுவதையும் சொல்லிக்கொடுத்திருப்பேன். யாரும் கேட்கவில்லை.

படைக்கும் தொழில் பிரம்மா மட்டுமே செய்யமுடியும் என்று சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லும். இந்த பதிவை எத்தனையோ ஆன்மீகவாதிகள் படிக்கிறீர்கள் நல்ல விசயங்கள் புரிந்தவர்கள் படிக்கிறீர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை.

இது எதனை காட்டுகிறது என்றால் புத்தகத்தை படித்துவிட்டு சோதிடத்தையும் ஆன்மீகத்தை புரிந்துக்கொள்ள நினைக்கிறீர்கள் அது தவறான ஒன்று. உங்களுக்குள் அனைத்தும் நடக்கும்பொழுது மட்டுமே அனைத்தையும் புரிந்துக்கொள்ளமுடியும்.

முத்தொழிலையும் செய்யக்கூடிய விசயம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அதனை புரிந்துக்கொண்டால் இது சாத்தியம். அம்மனும் தேவை தான். அதே நேரத்தில் நாம் பிரம்மாவாக மாறினால் இது சாத்தியப்படகூடிய ஒன்று. இதற்கு மேல் இதனைப்பற்றி நான் சொல்லகூடாது அது ரகசியபள்ளியில் படிக்கவேண்டிய விசயம்.

உங்களுக்கு எல்லாம் நான் சொல்லகூடிய கருத்து என்ன என்றால் ஆன்மீகத்தின் அடிப்படை எல்லாம் நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். தேடுதல் அதிகமாக இருந்தால் மட்டுமே அனைத்தும் உங்களுக்குள் புரியும். குப்பையை நோண்ட நோண்ட தான் கோழிக்கு இரை கிடைக்கும் என்று என் குரு அடிக்கடி சொல்லுவார். என்னால் படைக்க முடியுமா என்று இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒருவர் மட்டும் ஆசையாக என்னிடம் உங்களை போல் என்னால் வரமுடியுமா என்று கேட்டார் அவரை தவிர வேறு யாரும் இதனைப்பற்றி கேட்கவில்லை.  

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Enakku ungal padhivai padithavudan kulandhai illathavarkku oru vazhi kitaithu vittathu enru makizhthen.ithu eppadi saathiyappadum enru naan yosikkavillai enakku ungal mel ulla nampikkaiyal yosikkavillai.neengal ungalaal mudiyum enpadhaal thaane padhivil solkireerkal.adhanaal naan ethu parriyum yosikkavillai.