Followers

Sunday, August 3, 2014

ஒரே வீட்டில் ஐந்து கிரகம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு முறை என்னிடம் ஒரு நபர் சோதிடம் பார்த்தார். அவரின் உறவினர் ஒருவரின் ஜாதகத்தை காண்பித்து சோதிடப்பலனை கேட்டார். அவரின் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் எட்டாவது வீட்டில் இருந்தன.

அவரிடம் இவரை எந்த மலைப்பகுதிக்கும் சென்று தங்க சொல்லாதீர்கள். அதே நேரத்தில் இடி இடிக்கும்பொழுது இவரை வெளியில் செல்ல சொல்லாதீர்கள் என்று சொன்னேன். பிறகு அவர் என்னிடம் இவர் இறந்துவிட்டார் என்று சொன்னார்.

இறந்தவரின் ஜாதகத்தை உடனே என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்பொழுது எனக்கு பெரிய அளவில் சோதிடத்தில் வாக்கு பலிதமும் இல்லாத நேரத்தில் இப்படி சொன்னேன்.

அவர் என்னிடம் ஒரு கோவிலுக்கு செல்லும்பொழுது மலையில் இரவில் தங்கும்பொழுது அங்கு மழை பெய்து இடி இடித்து அதனால் இவர் இறந்துவிட்டார் என்று சொன்னார்.

மூன்று கிரகங்களுக்கு மேல் ஒரு வீட்டில் அமர்வது நல்லதல்ல. எட்டாவது வீட்டில் ஐந்து கிரகம் இருந்தால் அவர் கண்டிப்பாக துர்மரணத்தை தான் அடைவார். அதுவும் மலைப்பிரதேசங்களில் இருந்து கீழே விழுந்து கூட இறக்கலாம். 

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பை உடையவர்களாக இருந்தால் அவர்களிடம் இதனைப்பற்றி சொல்லி தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்ள சொல்லவேண்டும். ஆயுளுக்கு பங்கம் வரும் இடத்திற்க்கு செல்லகூடாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: