Followers

Tuesday, August 19, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    என்ன தான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் அந்த விஞ்ஞானம் நம்ம ஆன்மீகத்திற்க்கு தோல்வி அடைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள இந்த பதிவை தருகிறேன்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு உடலில் ஒரு நோய் இருந்தது. அந்த நோயை கண்டறிய சோதனை மருத்துவத்தில் செய்யவேண்டும். அப்படி செய்யும்பொழுது அவரின் உடலில் உள்ள நோயை அந்த மெஷின் வழியாக தெரியகூடாது. இது ஒரு ஆன்மீகசோதனையாக செய்ய வேண்டும் என்று ஒரு விளையாட்டை நடத்த வேண்டும் என்று எனது நண்பர்கள் வட்டம் முடிவு செய்தோம்.

அவருக்கு நோய் இருக்கிறது என்பதை ஒரு மருத்துவமனையில் மெஷின் வழியாக பரிசாேதனை செய்துமுடித்துவிட்டோம். பிற மருத்துவமனையில் இந்த சோதனையை நடத்தும்பொழுது இது தெரியகூடாது. ஆன்மீகவழியில் தெரியாமல் செய்யவேண்டும் என்பது நிபந்தனை.

ஒரு சாமியாரை அணுகி இதனை செய்ய கேட்டோம். அவரின் சக்தி வழியாக இதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவரும் இதனை ஏற்றுக்கொண்டு செய்து கொடுத்தார். குறிப்பிட்ட மருத்துவமனையில் இந்த டெஸ்ட் எடுக்கும்பொழுது நோயை கண்டறியமுடியவில்லை.

இது எப்படி சாத்தியம் என்றால் ஒரு சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்துவர்களுக்கு இது சாத்தியப்படக்கூடிய ஒன்று. நீங்கள் நினைக்கலாம் இப்படி செய்வது என்றால் எதனை வேண்டுமானாலும் சாதித்துக்கொள்ளலாமே என்று தோன்றும். கண்டிப்பாக செய்யமுடியும். மனிதன் சக்தியை நம்புவதில்லை. அதன் மீது சந்தேகம் கொள்கிறான். அதனால் அவனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அந்த சக்தி அவனுக்கு உதவுவதில்லை. இன்றைய காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: