Followers

Sunday, August 3, 2014

ஆன்மீக நாடு


வணக்கம் நண்பர்களே!
                    பல வெளிநாட்டு நண்பர்கள் என்னிடம் போன் செய்து தொடர்ந்து எழுதுங்கள் சார். உங்களின் எழுத்துக்கள் அவ்வப்பொழுது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது. அதே நேரத்தில் ஆறுதலாகவும் தருகிறது என்று சொல்லுவார்கள்.

பல வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் நல்ல ஆன்மீகத்தை வளர்த்துக்கொள்ளமுடியும் என்று சொல்லுவார்கள். அவர்களின் பார்வையில் இந்தியா நல்ல ஆன்மீக நாடு என்ற நினைப்பில் இருப்பவர்கள்.

இந்தியா ஆன்மீகத்திற்க்கு ஏற்ற நாடு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் ஆன்மீகத்தை விரும்புவதில்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். இங்குள்ள நல்ல விசயத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை என்று தான் சொல்லவேண்டும். 

ஜாதககதம்பத்தை தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் என்னால் முடிந்ததை தந்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று மட்டும் நினைக்கவேண்டாம். நிறைய விசயங்களை எழுதி உங்களை கொல்லாமல் விடுவதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.
தொடர்ந்து பார்க்கலாம்...


No comments: