Followers

Wednesday, August 27, 2014

வாக்கு பலிதம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சோதிடர் என்பவர் பல வருடம் தொழில் செய்து வந்தால் அவர் சொல்லும் பலன் அவரின் வாக்கு பலிதத்தால் கண்டிப்பாக நடக்கும். கிரகங்கள் செய்யாவிட்டாலும் இவர்களின் வாக்குபலித்தால் அது நடக்கும். அதனால் சோதிட தொழில் என்பது ஏனோ தானோ என்று செய்யாமல் மிகவும் பக்தியோடு செய்யப்படவேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தை பார்க்கும்பொழுது அவர் கண்டத்தில் இருந்தால் கூட அதனை நீங்கள் சொல்லும்பொழுது நேரிடையாக கண்டம் என்று சொல்லாமல் வெளியில் தெரியாது போல் சொல்லவேண்டும். ஏன் என்றால் நீங்கள் நேரிடையாக சொன்னால் அவர் இறப்பதற்க்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

ஒரு பனிரெண்டு வருடத்திற்க்கு மேல் சோதிடம் பார்த்தால் அவரின் வாக்கு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். அவர் சொன்னதால் அந்த நிகழ்வு நடைபெறும். அப்படி என்ன சோதிடர்களிடம் இருக்கிறது என்று கேட்கிறீர்களாக சனி குரு என்று ஒவ்வொரு கிரகமாக பெயரை சொல்லி வருவதால் அது மந்திரம் போல் மாறிவிடும். கிரகங்கள் அவரின் வாக்குக்காக செய்துக்கொடுக்கும்.

ஒரு சிலர் என்னிடம்  எப்படி சார் வாக்கு பலிதம் ஏற்படுவதற்க்கு வழி சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அதற்கு நான் சொல்லும் வழி நீண்ட காலம் சாேதிடத்தை சொல்லி வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும் என்பேன்.

ஒரு சிலர் வாக்கு பலிதத்தால் அடுத்தவர்களை கெட்டு போகவைத்த சோதிடர்களும் இருக்கிறார்கள். இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்று தான் சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: