Followers

Friday, August 22, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    சுக்கிரனை பற்றி நிறைய எழுதுகிறீர்கள். பிராமணர்களைப்பற்றி அதிகம் எழுதுவதில்லை அது ஏன் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.

குரு கிரகத்தைப்பற்றி நிறைய குரு தசாவில் எழுதியுள்ளேன். அதனை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். குரு கிரகத்தை நாம் பின்பற்றி வரவேண்டும் என்றால் நீங்கள் மிக தூய்மையாக இருக்கவேண்டும். இன்றைய காலத்தில் பிராமணர்கள் கூட அப்படி தூய்மையாக இருப்பதில்லை. 

பிராமணர்கள் சுக்கிரனின் கோவிலான காளிக்கோவில் வரை வந்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நாம் குறைச்சொல்லகூடாது. மக்கள் எங்கு செல்லுகிறார்களோ அங்கு அவர்கள் பணிபுரிகிறார்கள். 

பிராமணர்கள் கூட சுக்கிரனை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களால் ஆச்சாரத்தை பின்பற்ற முடியவில்லை அந்த காரணத்தால் இப்படி மாறிவிட்டார்கள். 

நீங்கள் குருவாக சுக்கிரனை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் இன்றைய காலம் அப்படிப்பட்டது அந்த காரணத்தால் சுக்கிரனைப்பற்றி அதிகமான பதிவுகள் வரும். சுக்கிரனை குருவாக ஏற்றுக்கொண்டு பின்பற்றி வரும்பொழுது உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். பிராமணர் அல்லாதவர்களின் குரு சுக்கிரன் தான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: