Followers

Saturday, August 23, 2014

சக்தி வெளிப்படும் தன்மை


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று எதார்த்தமாக நெட்டில் தேடியபொழுது உப்பிலியப்பன் கண்ணில்பட்டார். உங்களிடம் அதனை காட்டி யார் என்று கேட்டேன். ஒரு நண்பர் என்னிடம் முகநூல் வழியாக சரியாக சொன்னார். பல பேர் பின்னாேட்டம் வழியாக சொன்னீர்கள் அனைவருக்கும் நன்றி.

தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். ஒரு சில கோவிலுக்கு நான் கூட இதுவரை சென்ற்தில்லை. இனி மேல் சென்று அங்குள்ள கோவில்களை பற்றி உங்களுக்கு பதிவில் தருகிறேன்.

பெருமாள் ஒருவராக இருந்தாலும் ஏன் பல பேர்களில் நாம் அழைக்கிறோம் என்றால் ஒவ்வொரு பெயருக்கு தகுந்தார் போல் பலனை கொடுப்பார்கள். சிவனாக இருந்தாலும் சரி அம்மனாக இருந்தாலும் சரி பெயருக்கு தகுந்தார்போல் பலன் கிடைக்கும். அந்தந்த கோவில்களில் அந்தந்த சக்தி வெளிப்படும்.

பிரணாபிரதிஷ்டை செய்யும் நபரின் தன்மைக்கு ஏற்ப கோவிலின் சக்தி வெளிப்படும். பிரதிஷ்டை செய்யும் சித்தர் மற்றும் புரோகிதர்களின் தன்மைக்கு தகுந்தவாறு சக்தி வெளிப்படும்.

சநதோஷமாக வெளிப்படும் தன்மையில் பிரதிஷ்டை செய்தால் அந்த கோவிலுக்கு செல்லும்பொழுது சந்தோஷம் வெளிப்படும். பணம் எண்ணத்தில் பிரதிஷ்டை செய்தால் அந்த கோவிலுக்கு சென்றால் நமக்கு பணம் கிடைக்கும். பிரதிஷ்டை செய்யும் ஆட்களை பொறுத்து இது மாறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: