Followers

Sunday, August 3, 2014

கிரகங்களின் வக்கிரம்


வணக்கம் நண்பர்களே!
                     ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு கிரகம் வக்கிரம் பெறலாம். ஒரு கிரகத்திற்க்கு மேல் வக்கிரம் பெற்றால் அந்த மனிதனுக்கு பல சிக்கல்கள் உருவாகும். ஒரு சிலருக்கு மூன்று கிரகங்களுக்கு மேல் வக்கிரம் பெற்ற நேரத்தில் பிறப்பார்கள்.

பொதுவாக சுபக்கிரகங்கள் வக்கிரம் பெற்றால் நல்லது என்று சொல்லுவார்கள். சுபக்கிரகம் வக்கிரம் பெறும்பொழுது அதிகமான பலன்களை வாரி வழங்கும் சம்பந்தப்பட்ட ஜாதகர் நல்ல முறையில் இருப்பார். 

கெடுதல் தரும் கிரகங்கள் வக்கிரகம் பெற்றால் கெடுதல்களை வாரி வழங்கிவிடும். பொதுவாக தீயகிரகங்கள் வக்கிரம் பெறும்பொழுது அவர்கள் அதிகமாக அலைந்து திரிவார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்கமாட்டார்கள். வாழ்க்கை பலவித பிரச்சினையை சந்திக்கும்.

வக்கிரம் பெற்ற கிரகங்கள் மனிதனுக்கு அதிகமான சக்தியை கொடுக்கும் என்பதை நான் அறிந்து இருக்கிறேன். சராசரி மனிதனை விட இவர்களுக்கு பலம் அதிகமாக இருக்கும்.

எந்த ஒரு வேலையும் அதிக புத்தசாலியாக செய்வார்கள். அதே நேரத்தில் அதிக வலிமையுடன் செய்வார்கள். உங்களின் ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் வக்கிரம் பெற்றால் அதற்கு பரிகாரமாக திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவில் சென்று வழிப்பட்டு வருவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: