Followers

Monday, August 18, 2014

பரம்பரையாக தொடரும்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறுவது கடினமாக இருக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள் திருமணத்தை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். இது எனது கருத்து. 

என்னிடம் சோதிடம் பார்க்க வருபவர்கள் நிறைய பேர் திருமணம் நடைபெறாமல் இருக்கிறார்கள். நாற்பது வயதை கடந்து கூட திருமணம் நடைபெறாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்கும்பொழுது என்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் யாரும் பெண் பார்க்கவில்லை என்று சொல்லுகிறார்கள்.

ஒரு தலைமுறையில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் அடுத்த தலைமுறையில் யாராவது அப்படி இருப்பார்கள். அதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது திருமணம் நடைபெறாமல் இருக்கும் நபர்க்கு திருமணத்தை நடத்தி வைத்துவிடுங்கள்.

பொதுவாக இப்படிப்பட்டவர்களுக்கு ஜாதகத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருக்கும். அதாவது மூன்று கிரகங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும். ஏழாவது வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். லக்கினத்தில் நிறைய கிரகங்கள் அமர்ந்து ஏழாவது வீட்டை பார்த்துக்கொண்டு இருக்கும்.

ராகு கேதுவின் நிலையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒரு சில விசயங்கள் தெரியவரும்.அதனையும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து தெரிந்துக்கொண்டு பிரச்சினையை தீர்க்க பாருங்கள்.

பெரும்பாலும் ஆன்மீகத்தில் ஈடுபாட்டோடு இருக்கிறேன் என்று பல இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் இருந்தால் திருமணம் நடைபெறகூடாது என்பது இல்லை. இல்லறத்தில் இருந்துக்கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபடலாம்.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Aanmeegame nalla illrathirkaaka thaan.ithu en karuththu.