Followers

Monday, August 4, 2014

செவ்வாய்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய்க்கு பரிகாரம் ஒன்றை பார்க்கலாம். பொதுவாக எந்த பரிகாரம் வேலை செய்கிறதோ இல்லையோ செவ்வாய்க்கு மட்டும் செய்யும் பரிகாரம் கண்டிப்பாக எடுபடும்.

செவ்வாய் அதிக கோபம் உள்ள கிரகம். வேலையும் அதிக வேகத்தோடு செய்யும். அந்த காரணத்தால் நாம் நல்லது கெட்டதை உடனே பெற்றுக்கொள்ளுகிறோம்.

செவ்வாய்க்கு பிடித்த தேனும் தினையும் கலந்து படைக்கவேண்டும். அப்படி படைத்து வரும்பொழுது செவ்வாய் கிரகத்தால் வந்த பிரச்சினை தீரும். 

செவ்வாய்க்கு ஒரு சிக்கலான பரிகாரம் ஒன்றை சொல்லுகிறேன் முடிந்தால் செய்து பாருங்கள். 

காவல்துறையில் உள்ளவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுங்கள். காவல்துறையில் அல்லது பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்தால் போதுமான ஒன்று.

எனது நண்பரிடம் நான் செவ்வாய்க்கு சொன்ன பரிகாரம் ஒரு ஓட்டலை நடத்து அங்கு வரும் பாதுகாப்புதுறையில் உள்ளவர்களுக்கு இலவசமாக சாப்பாட்டை போடு என்று சொன்னேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: