Followers

Monday, August 4, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் ஒரு அம்மனை வணங்கிக்கொண்டு வருகிறீர்கள். உங்களைப்போல் வேறு ஒருவரும் ஒரு அம்மனை வணங்கிக்கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இருவருக்கும் சண்டை வந்தால் உங்களின் இருவரிடம் இருக்கும் சக்தியும் சண்டைப்போட்டுக்கொள்ளுமா என்று கேட்டார்.

இருவரும் சண்டைப்போட்டுக்கொள்கிறோம் என்றால் இருவரும் கையால் சண்டைப்போட்டுக்கொள்வதில்லை. அவர் அவர்களிடம் உள்ள சக்தியை வைத்து தான் சண்டைப்போட்டுக்கொள்வோம். இருவரில் ஒரு சக்தி வெற்றி பெறும். 

தோல்வி பெறும் சக்தி திரும்பி அடிவாங்கிக்கொண்டு வரும். அதன் பிறகு அந்த சக்திக்கு பலமுறை உரு ஏற்றி உருவாக்க வேண்டும். கொஞ்சநாட்கள் சென்ற பிறகு தான் சக்திக்கு பலம் கிடைக்கும்.

ஒரு சக்திக்கு என்ன தேவையோ அதனை எல்லாம் கொடுத்து தான் உரு ஏற்ற முடியும். சக்திக்கும் மனிதன் கொடுக்கும் உருவை பொறுத்து தான் அவனிடம் இருக்கும் சக்தியின் பவர்.

சக்தி மட்டும் அடிவாங்கிக்கொண்டு வராது. நமக்கும் பெரிய பாதிப்பு வரும். அதனை எல்லாம் தாங்கிதான் ஆகவேண்டும். என்ன செய்வது பிழைப்பு என்று வந்த பிறகு இதனை எல்லாம் எதிர்நோக்கி தான் ஆகவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: