Followers

Sunday, August 3, 2014

குலதெய்வமும் வாரிசும்


வணக்கம் நண்பர்களே!
                    நமது குலதெய்வம் நமக்கு அதிக நம்மை வழங்கும் என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன். அந்த வரிசையில் ஒரு புது தகவலை நாம் பார்க்கலாம்.

நமக்கு குழந்தையில்லை என்றாலும் நமது குலதெய்வம் நமக்கு அருளை வழங்கவில்லை என்று தான் அர்த்தம். அதாவது நமது குலதெய்வத்தின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை.

நமது குலம் நன்றாக தழைத்து வளரவேண்டும் என்பதற்க்கு நமது குலதெய்வத்தின் அருள் கண்டிப்பாக தேவை. இன்று பல பேர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போய்விடுகிறது. அவர் அவர்களின் குலதெய்வ வழிப்பாட்டை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.

உங்களுக்கு பிற தெய்வங்களின் அருள் இருந்து குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தை மிக நன்றாக வளருவதற்க்கு உங்களின் குலதெய்வத்தின் அருள் நிச்சயம் தேவைப்படும்.

அதே நேரத்தில் உங்களின் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு இருக்கும்பொழுது உங்களின் வாரிசு எந்த பிரச்சினையில் சிக்கியிருந்தாலும் அந்த பிரச்சினையில் இருந்து எளிதில் வெளிவந்துவிடுவார்.

அனைவரும் அவர் அவர்களின் குலதெய்வ வழிப்பாட்டை ஒழுங்காக செய்துக்கொண்டு வாருங்கள். நல்ல வாரிசுகளுடன் நல்ல வாழ்க்கையை நீங்களும் வாழலாம் உங்களின் வாரிசுகளும் வாழும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: