Followers

Monday, August 18, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்றைய ஆன்மீக அனுபவங்கள் பதிவை படித்துவிட்டு என்னிடம் நிறைய நண்பர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்தார்கள். நீங்கள் சொல்லுவது உண்மை தான் என்றார்கள். ஒரு சில நண்பர்கள் என்னிடம் பணம் கேட்டுருந்தால் நான் பணம் கொடுத்திருப்பேன் என்றார்கள். என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்க்கு நன்றி.

ஜாதககதம்பத்தில் இருந்து வருபவர்களிடம் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டேன். பணம் என்று எப்படி உங்களிடம் கேட்பேன். இது எனது தொழில் அதில் கடன் வாங்கினால் மாட்டிக்கொள்வது நானாக தான் இருப்பேன்.

தொழில் செய்யும் இடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமே அப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த பதிவில் சொல்லி நண்பர்கள் என்னோடு பல ஆண்டுகள் பழகியவர்கள். அவர்களிடம் கேட்கும்பொழுது நடந்த விசயத்தை சொன்னேன்.

நமது வாழ்க்கையில் நடக்கும் செய்தியை அப்படியே உங்களிடம் சொல்லும்பொழுது அதில் நிறைய சுவாராசியமானதாக இருக்கும். உங்களுக்கு அது பயன்படும் என்பதால் சொல்லுகிறேன். யாரையும் குறிப்பிட்டு தாக்கவேண்டும் என்று நான் சொல்லுவதில்லை.

பதிவு வழியாக வரும் நண்பர்கள் அனைவரையும் மிக நீண்ட தூரத்தில் வைத்து தான் பழகுவேன். எளிதில் பழகிவிட மாட்டேன். உங்களோடு நான் பழகினால் மாட்டிக்கொள்வது நானாக இருக்கும்.பதிவை படித்தீர்களாக உங்களின் வாழ்க்கையில் அது தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் விட்டுவிட்டு சென்றுவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: