Followers

Saturday, August 2, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் ஒரு கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார் அந்த கேள்வி இது நீங்கள் நிறைய எங்களுக்காக எழுதியுள்ளீர்கள். உங்களை சந்திக்கவும் விடுவதில்லை. எழுதுவதும் எங்களை விரட்டி அடிப்பது போல் எழுதியுள்ளீர்கள். ஆன்மீகவாதிகள் அன்பாக இருப்பார்கள் என்று பார்த்தால் நீங்கள் விரட்டி அடிக்கிறீர்கள். உங்களைப்பற்றி புரிந்துக்கொள்ளமுடியவில்லை.

பொதுவாக என்னை புகழ்வது பிடிக்காது. என்னை வெளிகாட்டிக்கொள்ளவும் நான் விரும்புவதில்லை. ஆன்மீகம் என்பது ஒரு பெரிய விசயம் கிடையாது. அனைவராலும் எளிதில் பயிலக்கூடிய ஒன்று தான். அதனை ஏன் பெரிய அளவில் நாம் விளம்பரம்படுத்த வேண்டும். நீங்களே என்னைப்பாேல் செய்ய முடியும் என்கிறபொழுது வீணாக நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்.

சந்தித்து என்ன செய்ய போகிறீர்கள். காலத்தை வீணடிக்காமல் உங்களின் வேலையில் ஈடுபடும்பொழுது நீங்கள் பெரிய அளவில் உயரமுடியும். அந்த ஒரு காரணத்தால் மட்டுமே நான் யாரையும் சந்திக்கவிரும்புவதில்லை.

ஆன்மீகவாதிகள் அன்பாக இருப்பார்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் யாரிடமும் அன்பாக இருக்கமாட்டேன். ஒவ்வொரு நாட்டின் மக்களைப்பற்றி நான் நிறைய விசயங்கள் தெரிந்துவைத்திருக்கிறேன். இந்தியனின் மிகப்பெரிய விசயம் என்ன என்றால் சென்டிமெண்டில் உங்களை அடிப்பார்கள். 

இந்தியனின் மிகப்பெரிய ஆயுதம் சென்டிமெண்ட் அதனால் நான் உஷாராக இருப்பேன். அன்பு என்பதை இவர்கள் பயன்படுத்துவதே அடுத்தவர்களை அடித்து கீழே தள்ளுவதற்க்கு தான். உங்களிடம் ஆன்மீகவாதிகள் அன்பாக இருக்கலாம் நான் இருக்கமாட்டேன். இங்கு அன்பு என்பது ஏமாற்றுவது என்பதின் மறுபெயர் தான் அன்பு. 

உங்களின் சக்தி அதிகரிக்கும்பொழுது நான் சொல்லுவது உங்களுக்கு புரியும். நானே சக்தியோடு தான் இருக்கிறேன். இதில் எதற்கு அடுத்தவனை தேடிச்சென்றேன் என்று நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். அந்த நேரத்தில் என்னை பற்றி உங்களுக்கு புரியும். 

உலகத்தில் கீழ்தரமான ஒரு செயல் எது என்றால் ஆன்மீகத்திற்க்காக அடுத்தவனை தேடிச்செல்வது மட்டுமே. நீங்களே என்னைப்போல் வரலாம். நம்பிக்கையோடு வழிபாட்டை செய்யுங்கள். 

நீங்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். யாராவது எதையாவது சொல்லுகிறார்கள் என்று போய் நிற்காதீர்கள். உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்வது போல் தான் அது. ஒவ்வொரு ஆன்மீகவாதியும் அவனுக்கு என்ன தேவையோ அதற்காக தான் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். 

உங்களின் பூஜை அறையில் இருந்தே நீங்கள் அனைத்தையும் சாதித்துக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: