Followers

Friday, August 29, 2014

கர்மகணக்கு


வணக்கம் நண்பர்களே!
                    வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பணகஷ்டம் இருக்கும் அதனால் நாம் கடன் பிறரிடம் வாங்குவோம். அந்த கடனை நாம் வாங்கியப்படி திருப்பிக்கொடுத்துவிடவேண்டும்.

நாம் ஒருவரிடம் ஐம்பது பைசா வாங்கிவிட்டு அந்த பணத்தை திரும்பிக்கொடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அன்று நாம் இறந்துவிட்டால் அந்த ஐம்பது பைசாவை திருப்பிக்கொடுப்பதற்க்காக நாம் திரும்பி பிறக்கவேண்டும்.

எந்த கடனையும் நாம் இங்கு வைத்துவிட்டு செல்லமுடியாது. அனைத்தையும் இங்கே தீர்த்துவிட்டு சென்றால் மட்டுமே இறைவனிடம் இடம் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் மறுபடி மறுபடி நீங்கள் பிறப்பு எடுத்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும்.

இன்றைக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுவது ஒரு வேலையாக பல பேர் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக அடுத்த பிறப்பு எடுத்து படாதபாடு படவேண்டும்.

அவசரத்திற்க்கு பணம் நீங்கள் வாங்கினாலும் அந்த பணத்தை எவ்வளவு விரைவில் திருப்பிக்கொடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவில் திருப்பிக்கொடுத்துவிடுங்கள். திருப்பிக்கொடுக்க காலம் அதிகம் தேவைப்பட்டால் அவரிடம் உண்மையான நிலவரத்தை சொல்லிவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: