Followers

Wednesday, August 6, 2014

ஆடம்பரம் வேண்டாம்


வணக்கம் நண்பர்களே!
                    இந்தியாவில் உள்ளவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் வசிப்பவர்கள் அதிகமாக ஆடம்பரத்தை சமீபகாலமாக விரும்புகிறார்கள். ஒரு நாள் விரும்பி செல்லலாம். தினமும் ஆடம்பரத்தை விரும்பி சென்றால் அது தான் தவறு.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் நன்றாக கஷ்டப்பட்டு உழைப்பார்கள். அவர்கள் செலவு செய்வதற்க்கே பயப்படுவார்கள். ஏன் கஷ்டப்பட்ட காசை வீணாக செலவு செய்யவேண்டும் என்பார்கள் ஆனால் இந்தியாவில் வேலை பார்க்கும் மக்கள் அதிக செலவு செய்வதை சில ஆண்டுகளாக பார்க்கமுடிகிறது.

கை நிறைய பணம் வருகிறது என்பதற்க்காக செலவு செய்கிறேன் என்று நீங்கள் செலவு செய்தால் நீங்கள் தான் முட்டாள். உங்களின் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உங்களை படிக்கவைத்த காரணத்தால் இன்று நீங்கள் நல்ல நிலைமையில் இருக்கின்றீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு வரும் பணத்தை சேர்த்து வைத்தால் நாளை உங்களின் வாரிசுகள் ஒரு கம்பெனிக்கு முதலாளியாக அமருவார்கள்.

நாம் யாருக்கு வேலை செய்கிறோம் நமது வாரிசுகள் அவர்களுக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஊதாரிதனமான செலவை குறைக்க பாருங்கள். கண்டிப்பாக ஒரு சில காலகட்டத்திலேயே உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

இன்று மதியம் திருப்பூர் பயணம். நாளை திருப்பூரில் ஒரு சில நண்பர்களை சந்திக்க செல்லுகிறேன். அவ்வப்பொழுது நேரம் கிடைக்கும்பொழுது பதிவுகளை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.