Followers

Tuesday, August 19, 2014

விரைய தசா பகுதி 39


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலத்தில் கிரகங்களின் பாதிப்பு அதிகரிப்பதற்க்கு காரணம் மனிதன் தன்னை நீதியின் வழியில் இருந்து மாற்றிக்கொண்ட காரணத்தால் மட்டுமே. 

முன்பு நிலத்திற்க்கு பட்டா கூட கிடையாது ஆனால் இன்று ஒரு நிலத்திற்க்கு பல பேர்களிடம் பட்டா இருக்கிறது. முன்பு இந்த வயல் மற்றும் நிலத்தை நீ வைத்துக்கொள் என்று வாய்மொழியாகவே சொல்லிக்கொண்டு வைத்திருப்பார்கள். இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது என்று நீங்களே இந்த உலகத்தில் நடக்கும் விசயத்தை வைத்து பார்த்துக்கொள்ளலாம்.

என்னை சந்திக்க ஒரு முதியவர் வந்திருந்தார் அவர் தன்னுடைய நிலத்தை அடமானமாக வைத்து ஒருவரிடம் பணம் வாங்கியிருக்கிறார். அவர் கொஞ்ச நாளில் பணத்தை திருப்பிக்கொடுத்த நிலத்தை மீட்கலாம் என்று செல்லும்பொழுது பணம் கொடுத்தவர் என்னிடம் நீங்கள் உங்களுடைய நிலத்தை எழுதிக்கொடுத்திருக்கிறீர்கள். அதாவது விற்றதுபோல் செய்துவிட்டீர்கள் என்று சொல்லி இவரிடம் சொன்னபோல் தான் இவருக்கே தெரிந்து இருக்கிறது இவர் ஏமாற்றுக்காரர் என்று நினைத்து கோர்ட்க்கு அலைந்திருக்கிறார்.

பொதுவாக ஜாதகத்தில் புதன் பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் அடுத்தவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட போனாலும் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள். 

அவருக்கும் புதன் பனிரெண்டில் தான் இருந்தது. பனிரெண்டாவது வீட்டு தசா நடக்கும்பொழுது இப்படி நடந்துவிட்டது. இன்றைக்கும் பல கிராமங்களுக்கு சென்றால் அடுத்தவர்களின் சொத்தை ஆட்டையை போடுவதே வேலையாக பல பேர் செய்துக்கொண்டு இருப்பார்கள். அடுத்தவர்கள் கூட கிடையாது சொந்த அண்ணன் தம்பி உறவுகளில் கூட இப்படி தான் இன்று நடைபெறுகிறது.

எனது குரு நிலப்பிரச்சினைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்று எனக்கு சொல்லியுள்ளார். இன்றைக்கு இருக்கும் நிலங்கள் பல இடம் கோவிலுக்கு சொந்தமனாதாக இருக்கும். அதில் இறங்கி நீ தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளாதே என்பார். நானும் இதற்கு அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.



1 comment:

nallur parames said...

Neethi nerippadi nadanthaal entha kirakamum paadhikkaadha?