Followers

Friday, August 8, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    சக்தியைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். நமது கோவில்களில் அதிகமான சக்தி இருக்கின்றது ஆனால் அந்த சக்தியை நீங்கள் அளவோடு எடுத்துக்கொண்டு தான் வரமுடியுமே தவிர அதிகமான சக்தியை நீங்கள் எடுக்கமுடியாது.

உங்களின் உடல் முழுவதையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டது. நமது உணவு முறைகள் நமது உடலை வலுகுன்றியதாக மாற்றிவிட்டது. உடலில் இருக்கும் தாங்ககூடிய பேட்டரி சரியில்லை என்றால் எப்படி பேட்டரியை ரீசார்ச் செய்யமுடியும்.

முதலில் நாம் கோவிலுக்கு செல்லுவதைவிட நமது உடலை நல்ல வலுவாக மாற்ற வேண்டும். உடல் வலுப்பெறும்பொழுது நாம் நன்றாக சேமிக்ககூடிய நல்ல பேட்டரியாக நமது ஆத்மா விளங்கிவிடும்.

உடனே கேட்காதீர்கள் உடல் வலுவாக இருந்தால் நமது ஆத்மா வலுவாக மாறிவிடுமா என்று கேட்காதீர்கள். உடலும் வலிமையாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் ஆத்மாவும் வலிமையாக இருக்கவேண்டும். உடலில் நோய் இருந்தால் ஆத்மா படுத்துவிடும்.

உங்களின் உடல் சுத்தம் மற்றும் உங்கள் உடல் வலிமையை பற்றி அதிகம் நான் பேசி வருகிறேன். உடலை நன்றாக பேணிகாத்து வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.




No comments: