Followers

Friday, August 1, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    திருவாரூர் சரவணன் அவர்கள் அம்மன் பூஜைக்கு பூக்களுக்கு செய்யும் செலவே பத்தாயிரத்தை தாண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பை செலுத்த வைத்தற்க்கு நன்றி என்று சொல்லிருந்தார்.

அம்மனுடைய பூஜைக்கு செய்யும் செலவு பத்தாயிரத்தை தாண்டும். வரும் பணத்தை முழுவதும் இதற்கே செலவு செய்கிறேன். இந்த மாதம் கூடுதலாக செலவு செய்தேன். நிறைய பேர்களின் உழைப்பு இதில் இருக்கிறது.

அம்மன் நம்மை வாழ வைக்கிறது. அதற்கு நாம் செய்கிறோம். நாம் எந்தளவுக்கு செய்கிறோமோ அந்தளவுக்கு நமக்கு அம்மன் கொடுக்கும். நான் பூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். விதவிதமாக பூஜையை செய்துக்கொண்டே இருப்பேன். அதனால் தான் என்னால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய முடிந்தது.

நமக்கு கொடுக்கும் அம்மனுக்கு நாம் கணக்கு பார்க்காமல் செய்துக்கொண்டு இருப்பதால் இன்றளவை வரை நாம் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அதனை நீங்களே உணர்வீர்கள். உங்களின் வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை வைத்து நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

இந்த பூஜையை முதன் முதலில் ஆரம்பித்தப்பொழுது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பணம் என்னிடம் அதிகம் இல்லை. அப்பொழுது கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள் அனுப்பிய பணம் பெரும்மளவு உதவி புரிந்தது. இன்று பல நண்பர்கள் அனுப்ப தொடங்கிவிட்டார்கள். நன்றியை அவருக்கு தான் நீங்கள் முதலில் சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: