Followers

Friday, August 22, 2014

செல்வவளம் உயருவதற்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது நமக்கு எப்படியாவது அதிக பணம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்க்கான வழியை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிக்கொண்டு வருகிறேன்.அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து செல்வந்தராக மாறிவிடுங்கள்.

நம்மிடம் இருக்கும் கர்மாவை குறைக்கவேண்டும். அதனை எப்படி குறைப்பது அதற்க்கான ஒரு வழியை நான் சொல்லுகிறேன். ஒரு சில காலத்தில் அன்னதானம் மிகப்பெரிய தானமாக இருந்தது. அந்த காலம் என்பது மிகப்பெரிய பஞ்சத்தால் மக்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். இன்றைய காலத்தில் ஒரளவு பஞ்சம் குறைந்துவிட்டது.

பணத்தட்டுபாடு என்றும் நிலவிக்கொண்டே இருக்கிறது. பணத்தை வைத்து ஒரு தானத்தை செய்தால் போதும். நமது கர்மவினை குறையும். பணத்தை வைத்து எப்படி தானம் செய்வது? 

நம்மிடம் இருக்கும் வறுமையான நண்பர்களுக்கு உங்களால் முடிந்த பணஉதவியை செய்யுங்கள். நாம் எதனை வாங்கிக்கொடுத்தாலும் ஒரு சிலர் திருப்தி அடையமாட்டார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் இந்த சின்ன உதவி அவர்களின் ஆத்மாவில் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.

ஒருவர் எதனையோ வாங்க நினைக்கிறார்கள்.கையில் பணம் இல்லை. நாம் பணத்தை கொடுக்கும்பொழுது அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். பணம் கொடுத்து உதவும்பொழுது நமக்கு பணம் எப்படியும் வந்துக்கொண்டே இருக்கும். எதாவது ஒரு வழியில் பணம் வந்துக்கொண்டே இருக்கும். தாராளமாக இதனை நீங்கள் சோதனை செய்து பாருங்கள் தெரியும்.

மனிதனிடம் ஒரு கெட்ட குணம் இருக்கும் ஒரு தடவை கொடுத்தால் அடுத்த தடவையும் வந்து நிற்பான். அதனை மட்டும் தவிர்த்துவிட்டால் போதும்.

மேலே படத்தில் இருப்பவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.