Followers

Tuesday, August 26, 2014

செவ்வாய்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய் கிரகத்திற்க்கு ஒரு பரிகாரம் நான் செய்வேன். அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். உங்களுக்கு பிடித்தால் இதனை செய்யலாம். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பாதுகாப்புதுறையில் இருப்பவர்கள் அனைவரும் செவ்வாய் கிரகத்தின் காரகத்தில் இருப்பவர்கள். இந்த துறையில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்தால் நமக்கு செவ்வாய்கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சென்னையில் நான் இருக்கும்பொழுது எனது நண்பர் ஒருவரிடம் அவரது பைக்கை எடுத்துக்கொண்டு வா என்று சொல்லிவிட்டு ஏதாவது ஒரு இடத்திற்க்கு செல்வது உண்டு. அப்படி செல்லும்பொழுது பைக்கில் கொஞ்சம் வேகமாக சென்றாலும் உடனே பாேக்குவரத்து பாதுக்காப்பு துறையில் இருக்கும் காவலர்கள் எங்களை மடக்கிவிடுவார்கள்.

நான் அவர்களை பார்த்தவுடன் சந்தோஷப்பட்டுக்கொள்வேன் நமது பாவத்தை குறைக்க ஆண்டவனே அனுப்பிவைத்தவர்கள் போல் தெரிவார்கள். அவர்கள் எப்படியும் பணத்தை தான் வாங்க நினைப்பார்கள். நான் கொடுக்கும்பொழுது எனது கர்மா முழுவதும் இத்துடன் தீரவேண்டும் என்று நினைத்து கொடுத்துவிடுவேன்.

நீங்கள் இதனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும் அதாவது செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு பெருமளவு குறையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Kalairajan said...

அய்யா
இது லஞ்சத்துக்கு வழி